திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1571 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1571பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரிதர்க்காக சாரத்தியம் பண்ணியும் மார்விலே அம்பு ஏற்றும் உபகரிக்கும் அவனுக்கு அல்லது வேறு சிலர் விஷயமாக என்னுடைய ஹிருதயத்தில் தாழ்ச்சி பிறவாது) 4
உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவர்க்காய்ச் சென்று இரங்கி யூர்ந்தவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை வம்பார் புனல் காவிரி அரங்கமாளி என்னாளி விண்ணாளி ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –7-3-4
பதவுரை Show / Hide
உரங்களால் இயன்ற மன்னர் மாள, Urangalal Iyanra Mannar Maala - மிடுக்கினால் மிகக் துரியோதனாதியரசாகள் தொலையும்படி
பாரதத்து, Bharathaththu - பாரதயுத்தத்திலே
ஐவர்க்கு ஆய் சென்று, Aivarkku Aay Sendru - பஞ்சபாண்டவர்க்குத் துணையாயெழுந்தருளி
இரங்கி, Irangi - (அவர்கள் விஷயத்தில்) மனமிரங்கி
ஒரு தேர் ஊர்ந்து, Oru Ther Oornthu - (அவர்களுடையதான) ஒரு தேரை ஸாரதியாயிருந்து நடத்தி
அவர்க்கு, Avarkku - அப்பாண்டவர்க்கு
இன் அருள் செய்யும் எம்பிரானை, In Arul Seyyum Empranai - பரம கிருபையைச் செய்தருளின ஸ்வாமியும்
வம்பு ஆர் புனல் காவிரி, Vambu Aar Punal Kaviri - புதுமைமிக்க தீர்த்தத்தை யுடைய திருக்காவேரியால் சூழப்பட்ட
அரங்கம், Arangam - திருவரங்கம் பெரியகோயிலை
ஆளி, Aali - ஆள்பவனும்
என் ஆளி, En Aali - என்னையாள்பவனும்
விண் ஆளி, Vin Aali - பரமபதத்துக்குத்தலைவனும்,
ஆழி சூழ், Aazhi Soozh - கடல் சூழ்ந்த
இலங்கை, Ilankai - லங்காபுரியானது
மலங்க, Malanga - வியாகுலமாகும்படி
சென்று, Sendru - அங்கெழுந்தருளி
சரங்கள் ஆண்ட, Sarangkal Aanda - அம்புகளை நடத்தின
தண் தாமரை கண்ணனுக்கு அன்றி, Than Thamarai Kannankku Andri - குளிர்ந்த தாமரைப் பூப்போன்ற திருக்கண்களையுடையனுமான திருநறையூர் நம்பிக்கல்லது (மற்றொருவர்க்கு)
என் மனம், En Manam - என் மனமானது
தாழ்ந்து நில்லாது, Thazhndhu Nilladhu - நைச்சியம் வஹித்திருக்க மாட்டாது.