திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1572 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1572பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் ஒழியச் செல்லாமை பிறந்து-அது நேர் கொடு நேர் கிடையாமை களவு கண்டு புஜிக்கப் புக்கு-அது தன்னை முடியச் செய்து தலைக் கட்டாமை வாயது கையதாக அகப்பட்டு-உரலோடு சேர்த்து கட்டுண்டு-அடியுண்டு அடிக்கு இறாய்த்து உடம்பு வெளுத்து-பயர்த்து-பேகணித்து நின்ற நிலையை அனுசந்திக்க அனுசந்திக்க இவர்க்கு இவ்விருப்பு தானே யாய்த்து-சர்வ வித போக்யமுமாய் இருக்கிறது – சர்வ ரச-என்கிற படியே இனியதாக நின்றது –இப்படி சர்வ வித போக்யனாய் இருக்கிறவனை ஒழிய என் உடைய நெஞ்சு வேறு சிலரை அநவரத பாவனை பண்ணாது) 5
ஆங்கு வென்னரகத்து அழுந்தும் போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து தங்கு தாமரை யன்ன பொன்னாரடி எம்பிரானை யும்பர்க்கு அணியாய் நின்ற வேங்கடத்தரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட தீங்கரும்பினைத் தேனை நன்பாலினை யன்றி என் மனம் சிந்தை செய்யாதே –7-3-5
பதவுரை Show / Hide
ஆங்கு வெம் நரகத்து, Aangu Vem Narakaththu - அப்படிப்பட்ட கொடிய நரகங்களிலே
அழுந்தும் போது, Azhundhum Podhu - அழுந்தி நோவுபட நேர்ந்தகாலத்து
அங்கே வந்து, Angae Vandhu - அவ்விடங்களில் வந்து
அஞ்சேல் என்று, Anjael Endru - பயப்படவேண்டாவென்று
அடியேனை தாங்கு, Adiyenai Thaangu - அடியேனைப் பாகாத்தருள்கின்ற
தாமரை அன்ன பொன் ஆர் அடி, Thamarai Anna Pon Aar Adi - தாமரைபோன்று அழகு மிக்க திருவடிகளையுடையனும்
எம்பிரானை, Embiraanai - எமக்கு உபகாரகனும்
உம்பர்க்கு அணி ஆய் நின்ற, Umbarkku Ani Aay Nindra - மேலுலகங்கட்கெல்லாம் அலங்காரமாயிருக்கின்ற
வேங்கடத்து, Vengadathu - திருமலையில் எழுந்தருளியிருக்கிற
அரியை, Ariyai - சிங்கம் போன்றவனும்
பரி கீறியை, Pari Keeriyai - குதிரையுருவாய் வந்த அசுரன் வாயைக் கிழிந்தவனும்
வெண்ணெய் உண்டு, Vennai Undu - வெண்ணெயை (க் களவாடி) அமுது செய்து
உரலினிடை, Uralinidai - உரலோடு கூட
ஆப்புண்ட, Aappund - கட்டுண்டிருந்தவனும்
தீம் கரும்பினை, Theem Karumbinai - மதுரமான கருப்பஞ்சாறு போன்றவனும்
தேனை, Thenai - தேன் போன்றவனும்
நன் பாலினை அன்றி, Nan Palinai Andri - இனிய பால்போன்றவனுமான திருநறையூர் நம்பியையல்லது (மற்றொருவரை)
என் மனம், En Manam - எனது நெஞ்சானது
சிந்தை செய்யாது, Sindhai Seyyaadhu - நினைக்கமாட்டாது,