திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1577 | பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பகவத் விஷயத்தில் ருசி உடையார் இத்தைப் பாடப் பாருங்கோள்-கரும்பு தின்னக் கூலி இறே பாடுகை தானே பிரயோஜனமாக போந்து இருக்க அதுக்கு மேலே பிராப்தி பிரதிபந்தகமான பாபங்கள் நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் இல்லை -என்று தன்னடையே விட்டுப் போம்) 10 | தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –7-3-10 | பதவுரை Show / Hideதோடு, Thodu - இதழ்களானவை விண்டு, Vindhu - விரிந்து அலர், Alar - விகஸிக்கப்பெற்ற பூ பொழில், Poo Pozhil - பூஞ்சோலைகளையுடைய மங்கையர் தோன்றல், Mangaiyar Thondral - திருமங்கை நாட்டிலுள்ளவர்கட்குத் தலைவரும் திரு ஆலி நாடன், Thiru Aali Naadan - திருவாலி நாட்டுக்குப் பிரபுவானவரும் வாள், Vaal - வாளை யுடையவருமான கலியன் அவன், Kalyan Avan - அத் திருமங்கையாழ்வார் நல் நறையூர் நின்ற நம்பி தன், Nal Naraiyur Nindra Nambi Than - திருநறையூர் நம்பியினுடைய நல்ல மா மலர் சே அடி, Nalla Maa Malar Che Adi - அழகிய சிறந்த திருவடித்தாமரைகளை சென்னியில் சூடியும், Chennaiyil Soodyum - (தமது) தலைமே லணிந்துகொண்டும் தொழுதும், Thozhudum - வணங்கியும் எழுந்து, Ezhundhu - எழுந்திருந்து ஆடியும், Aadiyum - (ப்ரீதிக்குப் போக்கு வீடாகக்) கூத்தாடியும் தொண்டர் கட்கு, Thondar Kadku - பாகவதர்களுக்கு (உஜ்ஜீவனமாக) சொன்ன, Sonna - அருளிச் செய்த சொல் மாலை, Sol Maalai - சொல் தொடையாகிய இவை பத்து பாடல், Ivai Paththu Paadal - இந்தப் பத்துப் பாசுரங்களையும் தொண்டீர், Thondir - எம்பெருமானடியார்களே! பாடுமின், Paadumin - நீங்கள் ஓதுங்கள்; பாட, Paada - அங்ஙனம் ஓதவே நும்மிடை பாவம் நில்லா, Nummidai Paavam Nilla - உங்களிடத்திற் பாவங்கள் நிற்கமாட்டா. |