| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 158 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 7 | கறந்த நல் பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய் பிறந்ததுவே முதலாக பெற்று அறியேன் எம்பிரானே சிறந்த நல் தாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே மறந்தும் உரையாட மாட்டேன் மஞ்சனம் ஆட நீ வாராய் – 2-4 7 | எம்பிரானே, Embiraane - எம்பிரானே! கறந்த, Karandha - (அந்தந்த காலங்களில்) கறந்த நல் பாலும், Nal paalum - நல்ல பாலையும் தயிரும், Thayirum - தயிரையும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய், Kadainthu uri mel vaitha vennai - (தயிரைக்) கடைந்து உறியில் வைத்திருக்கிற வெண்ணெயையும் பிறந்ததுவே முதல் ஆக, Pirandhadhuve mudhal aaga - (நீ) பிறந்தவன்று தொடங்கி பெற்று அறியேன், Pertru ariyen - கண்டறியேன் சிறந்த நல் தாய், Sirandha nal thay - (எல்லாரினுங் குழந்தைக்குச்) சிறக்கின்ற பெற்ற தாயும்(பிள்ளை மேல் குற்றம் உண்டானாலும் மறைக்கக் கடவ நல் சிறந்த தாயார் ) அலர் தூற்றும், Alar thootrum - பழி சொல்லுகின்றாளே என்பதனால், Enpathaanal - என்று சொல்லுவார்களே என்ற அச்சத்தினால் பிறர் முன்னே, Pirar munne - அயலா ரெதிரில் மறந்தும், Maranthum - ப்ராமாதிகமாகவும் உரை ஆட மாட்டேன், Urai aada maatten - (உனக்குக் குறைவைத் தருஞ்) சொல்லைச் சொல்ல மாட்டேன் மஞ்சனம் ஆட நீ வாராய், Manjanam aada nee vaaraay - நீராட நீ வர வேணும் |