திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1581 | பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு – அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற மகா பிரபாவர்களை –ஷண காலமும் பிரிய-காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும் பிரிய ஷமன் அல்லேன்) 4 | தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே –7-4-4 | பதவுரை Show / Hideதேர் ஆளும், Ther Aalum - தேர்களை நடத்தவல்லவனாய் வாள், Vaal - வாட்படையையுடையனான அரக்கன், Arakkan - இராவணனுடைய தென் இலங்கை, Then Ilangai - அழகிய லங்காபுரியை வெம் சமத்து, Vem Samathu - கொடிய போர்க்களத்தில் பொன்றி வீழ, Pondri Veela - சிதறியழிந்துபோம்படி போர் ஆளும் சிலை அதனால், Por Aalum Silai Adhanal - போரை நடத்தவல்ல வில்லினால் பொரு கணைகள், Poru Kanigal - கொடிய அம்புகளை போக்குவித்தாய், Pokkuviththai - பிரயோகித்தவனே! என்று, Endru - என்று சொல்லி, நாளும், Naalum - நாள்தோறும் தார் ஆளும் வரை மார்பன், Thar Aalum Varai Marban - மாலையை அணிந்தள்ள மலை போன்ற திருமார்பையுடையவனும் உம்பர் ஆளும், Umbar Aalum - மேலுலகங்களை ஆள்பவனும் பேராளன், Peraalan - பெருமை பொருந்தினவனுமான தண் சேறை எம்பெருமான், Than Serai Emperumaan - திருச்சேறைப் பெருமானுடைய பேர், Per - திருநாமங்களை ஓதும், Oodhum - ஓதுகின்ற பெரியோரை, Periyoorai - மஹாத்மாக்களை ஒருகாலும், Orukaalum - ஒருபோதும் பிரிகிலேன், Prikileen - பிரியமாட்டேன். |