திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1581 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1581பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு – அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற மகா பிரபாவர்களை –ஷண காலமும் பிரிய-காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும் பிரிய ஷமன் அல்லேன்) 4
தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப் போராளும் சிலையதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும் தாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பராளும் பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே –7-4-4
பதவுரை Show / Hide
தேர் ஆளும், Ther Aalum - தேர்களை நடத்தவல்லவனாய்
வாள், Vaal - வாட்படையையுடையனான
அரக்கன், Arakkan - இராவணனுடைய
தென் இலங்கை, Then Ilangai - அழகிய லங்காபுரியை
வெம் சமத்து, Vem Samathu - கொடிய போர்க்களத்தில்
பொன்றி வீழ, Pondri Veela - சிதறியழிந்துபோம்படி
போர் ஆளும் சிலை அதனால், Por Aalum Silai Adhanal - போரை நடத்தவல்ல வில்லினால்
பொரு கணைகள், Poru Kanigal - கொடிய அம்புகளை
போக்குவித்தாய், Pokkuviththai - பிரயோகித்தவனே!
என்று, Endru - என்று சொல்லி,
நாளும், Naalum - நாள்தோறும்
தார் ஆளும் வரை மார்பன், Thar Aalum Varai Marban - மாலையை அணிந்தள்ள மலை போன்ற திருமார்பையுடையவனும்
உம்பர் ஆளும், Umbar Aalum - மேலுலகங்களை ஆள்பவனும்
பேராளன், Peraalan - பெருமை பொருந்தினவனுமான
தண் சேறை எம்பெருமான், Than Serai Emperumaan - திருச்சேறைப் பெருமானுடைய
பேர், Per - திருநாமங்களை
ஓதும், Oodhum - ஓதுகின்ற
பெரியோரை, Periyoorai - மஹாத்மாக்களை
ஒருகாலும், Orukaalum - ஒருபோதும்
பிரிகிலேன், Prikileen - பிரியமாட்டேன்.