திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1582 | பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரமஹரமாய் இருக்கிற ஸ்ரீ திருச் சேறையிலே நாயனார் உடைய திருவடிகளை நாள் தோறும் போக ரூபமாக அனுசந்திப்பாருக்கு –என்னுடைய ஹிருதயமானது தேனூறி எப்பொழுதும் இனிதாக நின்றது இது வெருமனேயோ) 5 | வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பில் வல்லமணர் தமக்கும் அல்லேன்
முந்திச் சென்று அரி யுருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வருக்கு அல்லால்
சந்தப்பூ மலர்ச் சோலைத் தண் சேறை எம்பெருமான் தாளை நாளும்
சிந்திப்பார்க்கு என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –7-4-5 | பதவுரை Show / Hideஅரி உரு ஆய், Ari Uru Aay - நரஸிம்ஹரூபியாய் முந்தி சென்று, Mundhi Sendru - முந்துற வெளிப்பட்டு இரணியன் முரணை, Iraaniyan Muranai - இரணியாசுரனுடைய வலியை அழித்த, Azhitha - பாழ்படுத்தின முதல்வற்கு அல்லால், Muthalvarkku Allaal - ஜகத்காரணபூதனான எம்பெருமானுக்கல்லது, மாசு உடம்பின், Maasu Udambin - அழுக்கேறின உடம்பையுடையராய் வல், Val - வலிந்து வாது செய்பவர்களான அமணர் தமக்கும், Amanar Thamakum - ஜைநர்கட்கும் வந்திக்கும் மற்றவர்க்கும், Vandhikkum Matravarkkum - ‘வந்தே’ என்று சொல்லிக் கொண்டு திரிகிற பௌத்தர்கட்கும் அல்லேன், Alleen - கூட்டுப்படக் கடவேனல்லேன்; சந்தம் பூமலர், Sandham Poomalai - சந்தநப் புஷ்பங்களையுடைய சோலை, Solai - சோலைகளையுடைத்தான தண் சேறை, Than Serai - குளிர்ந்த திருச்சேறையிலுள்ள எம்பெருமான், Emperumaan - ஸாரநாதப் பெருமாளுடைய தாளை, Thaalai - திருவடிகளை நாளும், Naalum - நாள்தோறும் சிந்திப்பார்க்கு, Sindhippaarkku - தியானம் செய்யும் பாகவதர்திறத்தில் என் உள்ளம், En Ullam - என் மனமானது தேன் ஊறி, Then Oori - அமுதம் சுரக்கப்பெற்று எப்பொழுதும், Eppozhudum - இடைவிடாது தித்திக்கும், Thithikkum - திக்திக்கின்றது. |