திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1586 | பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எனக்கு இது தான் உண்டான படி எங்கனே என்கிறார்) 9 | கள்ளத்தேன் பொய்யகத்தேன் ஆதலால் போதருகால் கவலை என்னும்
வெள்ளத்தேற்கு என் கொலோ விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால்
தள்ளத்தேன் மண நாறும் தண் சேறை எம்பெருமான் தாளை நாளும்
உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாறே –7-4-9 | பதவுரை Show / Hideவிளை வயலுள், Vilai Vayalul - பயிர்தழைத்த கழனிகளில் (முளைத்திருக்கிற) கரு நீலம், Karun Neelam - கருநெய்தலை, களைஞர், Kalaignar - களைபிடுங்குகிற உழவர் தாளால், Thaalal - (தங்கள்) கால்களாலே தள்ள, Thalla - ஒதுக்கித்தள்ள, தேன், Then - (அதில்நின்று மொழுகின) தேனினுடைய மணம் நாறும், Manam Naarum - பரிமளம் வீசப்பெற்ற தண் சேறை, Than Serai - திருச்சேறையில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான், Emperumaan - ஸாரநாதப் பெருமாளுடைய தாளை, Thaalai - திருவடிகளை நாளும், Naalum - நாள்தோறும் உள்ளத்தே, Ullatthae - நெஞ்சிலே வைப்பாருக்கு, Vaipparukku - வைத்துச் சிந்தைசெய்கின்ற பாகவதர் விஷயத்தில் என் உள்ளம் உருகும் ஆறு காணீர், En Ullam Urugum Aaru Kanneer - என்மனம் நீர்ப்பண்டமாக உருகும் விதத்தைப் பாருங்கோள்; கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதாலால், Kallatthen Poi Agatthen Aathaalal - ஆத்மாபஹாரக்கள்வனும் வஞ்சநெஞ்சையுடையனுமாய் அடியேனிருப்பதால் போதருகால், Potharugal - ஒரு நொடிப் பொழுதும் இடைவிடாதே கவரை என்னும் வெள்ளத் தேற்கு, Kavarai Ennum Vellat Therku - துக்கமாகிற பெருங்கடலில் அழுந்திக்கிடந்த எனக்கு இது என் கொல், Idhu En Kol - இப்படிப்பட்ட பேறு எங்ஙனே உண்டாயிற்றோ? |