திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1587 | பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆழ்வார்-ஒலியை உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ் தொடையைக் கொண்டு-பகவத் விஷயத்தில் ருசி உடையீர் – ஹேய ப்ரத்ய நீகமாய்-தர்ச நீயமாய் இருந்துள்ள திருவடிகளிலே சூட்டுங்கோள்- அது செய்யும் பொது அஞ்சலியைப் பண்ணா நின்ற கையை உடையராய்க் கொண்டு தொழுது இம்மாலையைச் சூட்டுங்கோள்) 10 | பூ மாண் சேர் கருங்கழலார் போல் நடந்து வயல் நின்ற பெடையோடு அன்னம்
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான் தன்னை
வா மான் தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை தொண்டீர்
தூ மாண் சேர் பொன்னடி மேல் சூட்டுமின் நும் துணைக் கையால் தொழுது நின்றே –7-4-10 | பதவுரை Show / Hideஅன்னம், Annam - அன்னப்பறவைகள் வயல் நின்ற பெடையோடு, Vayal Nindra Pedaiyodu - கழனிகளில் திரிகிற பேடைகளோடு கூட, பூ மாண் சேர் கரு குழலார் போல் நடந்து, Poo Maan Ser Karu Kuzhalar Pol Nadandhu - பூக்களணிந்து அழகு பெற்ற கறுத்த கூந்தலை யுடைய இளம் பெண்களைப்போல நடந்து (பின்பு) தே மாவின், The Maavin - தேன் மாமரத்தினுடைய இன் நிழலில், In Nizhalil - இனிமையான நிழலில் கண் துயிலும், Kan Thuyilum - கண்ணுறங்கப்பெற்ற தண் சேறை, Than Serai - திருச்சேறையி லெழுந்தருளி யிருக்கிற அம்மான் தன்னை, Ammaan Thannai - எம்பெருமான் விஷயமாக,- வாம்மான் தேர், Vaammaan Ther - ஓடிவருகின்ற குதிரைகள் பூண்ட தேரையுடையரான பரகாலன் கலிகன்றி, Parakalan Kalikanri - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச் செய்த மாலை கொண்டு, Maalai Kondu - இச் சொல்மாலைகளைக் கொண்டு தொண்டீர், Thondir - ஓ பக்தர்களே!, தூ, Thoo - பரிசுத்தமாய் மாண் சேர், Maan Ser - மாட்சிமை தங்கியதாய் பொன், Pon - விரும்பத்தக்கதான அடிமேல், Adimael - (அப்பெருமானது) திருவடிகளின் மேல் நும் துணை கையால், Num Thunai Kaiyal - உங்களுடைய அஞ்ஜலிபந்தமான கைகளினால் தொழுது நின்று, Thozhudhu Nindru - ஸேவித்திருந்து சூட்டுமின், Sootumin - சூட்டுங்கோள். |