திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1588 | பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிராப்ய பூதனான அவன் வந்து நிற்கையாலே நமக்கு பிராப்ய பூமி தான் போலே இருந்தது என்று ஆதர அதிசயம் தோற்ற சொல்லுகிறது) 1 | தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ நல்லிருள் கண் வந்த
எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும்
முந்தி வானம் மழை பொழியும் மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று அனல் ஓம்பும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-1 | பதவுரை Show / Hideவானம், Vaanam - மேகமானது முந்தி, Mundhi - (யாகஞ் செய்வதற்கு) முன்னமே மழை பொழிய, Mazhai Pozhiya - மழை பெய்யப்பெற்றதும், மூவா உருவின், Moova Uruvin - கிழத்தனமற்ற உருவத்தை யுடையரான மறையாளர், Maraiyalar - பிராமணர்கள் அந்திமூன்றும், Andhimoonrum - முச்சந்தியும் அனல் ஓம்பும், Anal Oombum - அக்நிஹோத்ரம் செய்யப்பெற்றதுமான அணி ஆர் வீதி, Ani Ar Veethi - அழகுமிக்க திருவீதிகளை யுடைய அழுந்தூர், Azhundhoor - திருவழுந்தூரென்னுந் திருப்பதியானது,- தந்தை, Thandhai - தகப்பனாராகிய வஸுதேவருடைய காலில், Kaali - காலிலே (பூட்டப்பட்டிருந்த) பெரு விலங்கு தாள் அவிழ, Peru Vilangu Thaal Avizha - பெரிய விலங்குப்பூட்டு இற்றுவிழும்படியாக நள் இருள் கண், Nal Irul Kan - நடுநிசியிலே வந்த, Vandha - திருவவதரித்த எந்தை பெருமானார், Endhai Perumaanar - எம்பெருமான் மருவி நின்ற, Maruvi Nindra - நித்யவாஸஞ் செய்யப்பெற்ற ஊர்போலும், Oorpolum - திவ்யதேசமாகும். |