திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1589 | பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாரத சமரத்திலே பீஷ்மாதிகள் -அதி ரதர் மகா ரதர் -என்று இங்கனே ஆண் பிள்ளைகளாகப் பேர் பெற்று ஜீவித்து இருந்தோம் இப்போதாக பூசல் கோழைகளாக ஒண்ணாது -என்று சாரதி பக்கலிலே வந்து கிட்டுவது தேர் காலில் உழக்குண்டு போக ஒண்ணாது -என்று அகலுவதாய்க் கொண்டு அவர்கள் படுவுற்றை படா நின்றன வாய்த்துக் குருகு இனங்களும்) 2 | பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாளப் பாரதத்துத்
தேரில் பாகனாயூர்ந்த தேவ தேவனூர் போலும்
நீரில் பணைத்த நெடு வாளைக்கு அஞ்சிப் போன குருகினங்கள்
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-2 | பதவுரை Show / Hideநீரில் பனைத்த, Neeril Panaitta - தண்ணீரில் செழித்து வளர்ந்த நெடு வாளைக்கு, Nedu Valaikku - பெரிய மீன்களுக்கு அஞ்சி போன, Anji Pona - பயப்பட்டு ஓடிப்போன குருகு இனங்கள், Kurugu Inangal - குருகு என்னும் பறவைக் கணங்கள் ஆரல், Aaral - ஆரல் என்னஞ் சிறுமீனை கவுளோடு, Kavulodu - கதுப்பிலேகொண்டு அருகு அணையும், Arugu Anaiyum - பின்னையும் அணுகி வந்து சேரப்பெற்ற அணி ஆர் வயல் சூழ் அழுந்தூர், Ani Aar Vayal Soozh Azhundoor - அழகுமிக்க கழனிகளால் சூழப்பட்ட திருவழுந்தூரானது,- பாரித்து எழுந்த, Pariththu Ezhundha - (வெற்றி பெறவேணுமென்று) ஊக்கங்கொண்டு கிளர்ந்த படை மன்னர் தம்மை மாள, Padai Mannar Thammai Maala - ஆயுதபாணிகளான அரசர்கள் முடியும்படி பாரதத்து, Bharathaththu - பாரதப் போரில் தேரில், Theril - (அர்ஜுநனுடைய) தேரிலே பாகன் ஆய் ஊர்ந்து, Bhagan Aayi Oorndhu - ஸாரதியாயிருந்து கொண்டு நடத்தின தேவ தேவன், Deva Devan - வோதிதேவனுடைய ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாகும். |