| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 159 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 8 | கன்றினை வாலோலை கட்டி கனிகள் உதிர எறிந்து பின் தொடர்ந்தோடி ஓர் பாம்பை பிடித்துக் கொண்டாடினாய் போலும் நின் திறத்தேன் அல்லேன் நம்பி நீ பிறந்த நல் திரு நாள் நன்று நீ நீராட வேண்டும் நாரணா நீராட வாராய் -2 4-8 | கன்றினை, Kanrinai - கன்றினுடைய வால், Vaal - வாலிலே ஓலை கட்டி, Olai katti - ஓலையைக் கட்டி கனிகள், Kanigal - பழங்கள் (அஸுரத் தன்மையினால் உன்னைக் கொல்ல வந்த ஒரு கன்றை எறி குணிலாகக் கொண்டு அஸுராவேசமுள்ள விளா மரத்தின் பழங்கள்) உதிர, Udhira - (கீழே) உதிர்ந்து விழும்படி எறிந்து, Erindhu - வீசி பின், Pin - பின்பு ஓடி தொடர்ந்து, Odi thodarndhu - ஓடிப் போய் ஓர் பாம்பை, Or paambai - (காளியனென்ற) ஒரு ஸர்ப்பத்தை பிடித்துக் கொண்டு, Pidithuk kondu - பிடித்துக் கொண்டு ஆட்டினாய் போலும், Aattinaay polum - ஆட்டினவனோ தான் (நீ) நம்பி, Nambi - ஒன்றிலும் குறைவில்லாதவனே! நின் திறத்தேன் அல்லேன், Nin thirathen allen - (நான்) உன் விஷய மொன்றையு மறியாத வளாயிரா நின்றேன் (அது கிடக்கட்டும்) நீ பிறந்த, Nee pirandha - நீ அவதரித்த நல் திரு நாள், Nal thiru naal - திரு நிஷத்திரமாகும் (இந் நாள்) (ஆகையால்) நீ நின்று நீர் ஆட வேண்டும், Nee nindru neer aada vendum - நீ நின்று நீர் ஆட வேண்டும் நாரணா ஓடாதே வாராய், Naarana odaathe vaaraay - நாரணா ஓடாதே வாராய் |