Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 159 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
159பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 8
கன்றினை வாலோலை கட்டி கனிகள் உதிர எறிந்து
பின் தொடர்ந்தோடி ஓர் பாம்பை பிடித்துக் கொண்டாடினாய் போலும்
நின் திறத்தேன் அல்லேன் நம்பி நீ பிறந்த நல் திரு நாள்
நன்று நீ நீராட வேண்டும் நாரணா நீராட வாராய் -2 4-8
கன்றினை, Kanrinai - கன்றினுடைய
வால், Vaal - வாலிலே
ஓலை கட்டி, Olai katti - ஓலையைக் கட்டி
கனிகள், Kanigal - பழங்கள் (அஸுரத் தன்மையினால் உன்னைக் கொல்ல வந்த ஒரு கன்றை எறி குணிலாகக் கொண்டு அஸுராவேசமுள்ள விளா மரத்தின் பழங்கள்)
உதிர, Udhira - (கீழே) உதிர்ந்து விழும்படி
எறிந்து, Erindhu - வீசி
பின், Pin - பின்பு
ஓடி தொடர்ந்து, Odi thodarndhu - ஓடிப் போய்
ஓர் பாம்பை, Or paambai - (காளியனென்ற) ஒரு ஸர்ப்பத்தை
பிடித்துக் கொண்டு, Pidithuk kondu - பிடித்துக் கொண்டு
ஆட்டினாய் போலும், Aattinaay polum - ஆட்டினவனோ தான் (நீ)
நம்பி, Nambi - ஒன்றிலும் குறைவில்லாதவனே!
நின் திறத்தேன் அல்லேன், Nin thirathen allen - (நான்) உன் விஷய மொன்றையு மறியாத வளாயிரா நின்றேன் (அது கிடக்கட்டும்)
நீ பிறந்த, Nee pirandha - நீ அவதரித்த
நல் திரு நாள், Nal thiru naal - திரு நிஷத்திரமாகும் (இந் நாள்) (ஆகையால்)
நீ நின்று நீர் ஆட வேண்டும், Nee nindru neer aada vendum - நீ நின்று நீர் ஆட வேண்டும்
நாரணா ஓடாதே வாராய், Naarana odaathe vaaraay - நாரணா ஓடாதே வாராய்