திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1591 | பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேறு என்றால் இறாய்க்கக் கடவ வவை-அங்கு உள்ள போக்யதையின் மிகுதியாலே அத்தை மதியாதே சஞ்சரியா நிற்கும்-இத்தால் சொல்லிற்று ஆய்த்து-பிரளயம் என்று பாராதே ஜகத் ரஷணத்துக்காக ஸ்ரீ மகா வராஹம் ஆனது இறங்குமா போலே இரா நின்றது ஆய்த்து) 4 | வெள்ளத்துள் ஓர் ஆலிலை மேல் மேவி யடியேன் மனம் புகுந்து என்
உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் நின்ற ஊர் போலும்
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடித் போன காதல் பெடையோடும்
அள்ளல் செறுவில் கயல் நாடு மணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-4 | பதவுரை Show / Hideகாதல் பெடையோடும், Kaadhal Pedaiyodum - அன்பார்ந்த பேடையொடு கூடி (- (அணி ஆர் வயல் சூழ் அழுந்தூர்-;)) பிள்ளைக்கு இரை தேடி போன, Pillaiyku Irai Thedi Pona - குட்டிக்காக இரைதேடிக் கொண்டு சென்ற புள்ளு, Pullu - பறவையானது அள்ளல் செறுவில், Allal Seruvil - சேறு மிக்க விளை நிலங்களிலே கயல், Kayal - மீன்கள் நாடும், Naadum - தேடப்பெற்ற வெள்ளத்துள், Vellathul - பிரளய வெள்ளம் நேர்ந்த காலத்தில் ஓர் ஆல் இலை மேல் மேவி, Oor Aal Ilai Mel Mevi - ஒப்பற்றவொரு ஆலந்தளிரின் மீது பொருந்தியிருந்து அடியேன் மனம் புகுந்து, Adiyein Manam Pugundhu - (அந்த நிலைமையுடனே) அடியேனது நெஞ்சினுட புகுந்து என் உள்ளத் துள்ளும், En Ullath Thullum - எனது அந்த நெஞ்சினுள்ளும் கண்ணுள்ளும், Kannullum - கண்களிணுள்ளும் நின்றார், Nindraar - நிலைத்து நின்ற பெருமான் நின்ற, Nindra - நித்யவாஸம் பண்ணுகிற ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாகும். |