திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1592 | பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜகதாகாரனானவன் அசாதாரண விக்ரஹத்தைக் கண்டு அனுபவிக்கலாம் படி வந்து நிற்கிற ஊர் போலும்) 5 | பகலும் இரவும் தானேயாய்ப் பாரும் விண்ணும் தானேயாய்
நிகரில் சுடராய் இருளாகி நின்றார் நின்ற ஊர் போலும்
துகிலின் கொடியும் தேர்த் துகளும் துன்னி மாதர் கூந்தல் வாய்
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-5 | பதவுரை Show / Hideதுகிலின் கொடியும், Thugilin Kodiyum - துணிகளோடு கூடின துவஜங்களும் (- (அழுந்தூர்-;)) தேர் துகளும், Ther Thughalum - தேர் நடத்தும் போது உண்டாகும் தூள்களும் துன்னி, Thunni - நெருங்கி மாதர், Maathar - ஸ்திரீகளுடைய கூந்தல், Koondhal - கூந்தலிலே (ஊட்டப்பட்ட) அகிலின் புகையால், Akilin Pugaiyaal - அகிற்புகையுமாகிய இவற்றால் முகில் ஏய்க்கும், Mugil Aiykkum - வர்ஷகாலத்தை ஒத்திருக்கின்ற அணி ஆர் வீதி, Ani Ar Veethi - அழகிய திருவீதிகளை யுடைத்தான பகலும் இரவும் தானே ஆய், Pagalum Iravum Thaaney Aay - பகற்போதுக்கும் இராப் போதுக்கம் நியாமகனாய் பாரும் விண்ணும் தானே ஆய், Paarum Vinnum Thaaney Aay - லீலா விபூதிக்கும் நித்ய வீபூதிக்கும் நியாமகனாய் நிகர் இல் சுடர் ஆய், Nikar Il Sudar Aay - ஒப்பில்லாத தேஜஸ் பதார்த்தங்களுக்கும் ப்ரகாரியாய் இருள் ஆயி நின்றார், Irul Aayi Nindraar - இருளையும் ப்ரகாரமாக வுடையரான பெருமாள் நின்ற, Nindra - நித்யவாஸம் பண்ணப்பெற்ற ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாகும். |