திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1593 | பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னைப் பெறுகையால் வந்த அலாப்ய லாபம்தன்னது என்னும் இடம் தோற்ற ஸ்மிதம் பண்ணி – தான் செய்தது விலக்காத படியான தசையை எனக்கு பிறப்பித்து-என் அருகே வந்து நின்று அது சாத்மித்தவாறே ஹிருதயத்திலே வந்து புகுந்து இனி இவருக்கு ஒரு போக்கு இல்லை என்று தோற்ற நிற்கிறவர்) 6 | ஏடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்தருளி
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும்
நீடு மாடத் தனிச் சூலம் போழ்கக் கொண்டல் துளி தூவ
ஆடல் அரவத் தார்ப்போவா அணியூர் வீதி அழுந்தூரே –7-5-6 | பதவுரை Show / Hideநீடு மாடம், Needu Maadam - (நாட்டப்பட்ட) உயர்ந்த மாடங்களில் (- (அணி ஆர் வீதி அழுந்தூர்)) தனி சூலம், Thani Soolem - ஒப்பற்ற சூலமானது போழ்க, Pozhga - (மேகத்தின் வயிற்றைக்) கீண்ட வளவிலே கொண்டல், Kondhal - மேகமானது துளி தூவ, Thuli Thoova - மழை பொழியப் பெற்றதும் ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா, Aadal Aravathu Aarppu Ovaa - கூத்தாட்டவொலிகளினாலுண்டான கோலாஹலம் ஓயாமலிருக்கப்பெற்றதுமான ஏடு இலங்கு தாமரை போல், Aedu Ilangu Thaamarai Pol - இதழ்விளங்குகின்ற தாமரைப்பூ மலர்ந்தாலொப்ப செம் வாய் முறுவல் செய்தருளி, Sem Vaai Muruvai Seitharuliy - சிவந்த திருப்பவளத்தினால் புன்முறுவல் செய்துகொண்டு மாடு வந்து, Maadu Vandu - என் பக்கலிலே வந்து என்மனம் புகுந்து நின்றார், Enmanam Pugundhu Nindrar - என்மனத்திலே புகுந்து நின்றபெருமாள் நின்ற, Nindra - நித்யவாஸம் பண்ணப்பெற்ற ஊர் போலும், Oor Polum - திவ்ய தேசமாகும். |