திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1594 | பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரிவை பிரசங்கித்து-என்னுடைய கண்ணும் கண்ணீருமான ஆற்றாமையைக் கண்டு பின்னை கால் வாங்கிப் போக மாட்டாதே நின்றவர் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் போலும்) 7 | மாலைப் புகுந்து மலரணை மேல் வைகி அடியேன் மனம் புகுந்து என்
நீலக் கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர் போலும்
வேலைக் கடல்போல் நெடு வீதி விண்டோய் சுதை வெண் மணி மாடத்து
ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே –7-5-7 | பதவுரை Show / Hideவேலை கடல் போல, Velaikadal Pola - கரையையுடைய ஸமுத்ரம் போல (- (அழுந்தூர்-;) (பின்பு பிரிவதாக பிரஸங்கித்து)) நெடு, Nedu - நீண்டிருக்கின்ற வீதி, Veethi - வீதிகளிலுண்டான விண் தோய், Vin Thoy - ஆகாசத்தளவு மோங்கியிருக்கிற சுதை வெண்மணி மாடத்து, Suthai Venmani Maadathu - சாந்திட்டு வெளுத்திருக்கின்ற திருமாளிகைகளின் மேல் அழல் கதிரை, Azhai Kathirai - ஸூர்யகிரணங்களை ஆலைப் புகையால், Aalaip Pugaiyal - ஆலையாடிக்கிளர்ந்த புகையினால் மறைக்கும், Maraikkum - மறைக்கப்பெற்ற வீதி, Veethi - தெருக்களையுடைத்தான மாலை புகுந்து, Maalai Pugundhu - மாலைப்பொழுதிலே வந்து மலர் அணை மேல் வைகி, Malar Anai Mel Vaiki - பூம்படுக்கையில் தங்கியிருந்து அடியேன் மனம் புகுந்து, Adiyein Manam Pugundhu - அடியேனுடைய மனத்திற் பிரவேசித்து என் நீலம் கண்கள், En Neelam Kangal - எனது நீலோற்பலம் போன்ற கண்கள் பனி மல்க, Pani Malka - நீர் தளும்பும்படி நின்றார், Nindraar - நின்று கொண்டிருந்தவர் நின்ற, Nindra - நித்யவாஸம் பண்ணுகிற ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாகும் |