திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1595 | பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இன்ன பரிமாற்றம் பெற்றிலோம் -என்கிற அத்ருப்தி நெஞ்சில் கிடவாதபடி யாக வாய்த்து நெஞ்சிலே குறைவறப் புகுந்து நின்றபடி) 8 | வஞ்சி மருங்கிலிடை நோவ மணந்து நின்ற கனவகத்து என்
நெஞ்சு நிறையக் கை கூப்பி நின்றார் நின்ற ஊர் போலும்
பஞ்சியன்ன மெல்லடி நற்பாவை மார்கள் ஆடகத்தின்
அஞ்சிலம்பின் ஆர்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே –7-5-8 | பதவுரை Show / Hideபஞ்சி அன்ன மெல் அடி, Panjai Anna Mel Adi - பஞ்சுபோன்ற மிருதுவான பாதங்களையுடைய (- (அணி ஆர் வீதி அழுந்தூர்-)) நல் பாவைமார்கள், Nal Paavaimargal - நல்ல ஸ்திரீகளினுடைய ஆடகத்தின் அம் சிலம்பின், Aadakathin Am Silampin - பொன்மயமான அழகிய சிலம்புகளினின்று முண்டான ஆர்ப்பு, Aarppu - ஆரவாரமானது ஓவா, Ovaa - இடைவிடாதிருக்கிற வஞ்சி, Vanjci - வஞ்சிக்கொடிபோன்ற மருங்குல் இடை, Marungul Idai - இடுப்பானது நோவ, Nova - நோகும்படியாக மணந்து நின்ற, Manandhu Nindra - ஸம்ச்சேஷித்து நின்ற கனவகத்து, Kanavakathu - கனவிலே என் நெஞ்சு நிறையா, En Nenju Niraiyaa - எனது நெஞ்சு நிறையுமாறு கை கூப்பி, Kai Koopi - நான அஞ்ஜலி செய்யப்பெற்று நின்றார், Nindraar - நின்று கொண்டிருந்தவர் நின்ற, Nindra - நித்யவாஸம் பண்ணுகிற ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாகும். |