திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1596 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1596பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தலையில் உள்ளதை சர்வ ஸ்வாபஹாரம் பண்ணி தன் பக்கல் உள்ளது ஒன்றும் தொங்காத படி பண்ணிப் போந்த சுத்தியை உடையவர் வர்த்திக்கிற தேசம் போலும்) 9
என் ஐம் புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்து அருளிப் பொன்னங்கலைகள் மெலிவெய்தப் போன புனிதரூர் போலும் மன்னு முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட அன்னம் பெடையோடு உடனாடும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-9
பதவுரை Show / Hide
மன்னு முது நீர், Mannu Muthu Neer - ஒருநாளும் தண்ணீர் வற்றாத ஆழ்ந்த நீர் நிலைகளிலுள்ள தாமரைப்பூக்களிலே (- (அந்த இசைப்பாட்டுக்குச் சேர) (அணி ஆர் வயல் சூழ் அழுந்தூர்-,))
அரவிந்தம் மலர் மேல், Aravindham Malar Mel - தாமரைப்பூக்களிலே
வரி வண்டு, Vari Vandu - வரி வண்டுகள்
இசை பாட, Isai Paada - இசைகளைப் பாடா நிற்க
அன்னம், Annam - அன்னப்பறவை
பொடை யோடும், Podai Yodum - தன் பேடையோடுகூட
ஆடும், Aadum - நர்த்தனம் பண்ணப்பெற்ற
இங்கே, Inge - நானிருக்குமிடத்து
எழுந்நருளி, Ezhunnaruli - எழுந்தருளி
என் ஐம்புலனும், En Aimpulanum - எனது பஞ்சேந்திரய அறிவையும்
எழிலும், Ezhilum - அழகையும்
கொண்டு, Kondhu - கொள்ளைகொண்டு
பொன் அம் கலைகள், Pon Am Kalaigal - மிக அழகிய (எனது) வஸ்திரங்கள்
மெலிவு எய்த, Melivu Eytha - தளரும்படியாகச் செய்து
போன, Pona - பிரிந்துபோன
புனிதர், Punithar - பரமபவித்திரருடைய
ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாகும்.