திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1597 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1597பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சொல்களால் சம்ருத்தமாய் உள்ள தமிழ் தொடையை வாயாலே சொல்ல – பாவத்தை உண்டாக்குவதானாலும் தவிர ஒண்ணாததைச் சொல்ல பாவங்கள் தன்னடையே போம்) 10
நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன் சொல்லில் பொதிந்த தமிழ் மாலை சொல்லப் பாவம் நில்லாதே –7-5-10
பதவுரை Show / Hide
நெல்லில், Nellil - நெற்பயிரினிடையே (முளைத்த)
குவளை, Kuvazhai - கருநெய்தற் பூக்கள்
கண் காட்ட, Kan Kaatta - (அவ்வூர் பெண்களது) கண்கள் போன்றுவிளங்கவும்
நீரில், Neeril - நீரிலே முளைத்த
குமுதம், Kumudham - ஆமபல் பூக்கள்
வாய் காட்ட, Vaai Kaatta - (அவர்களது) வாய் போன்று விளங்கவும்
அல்லி கமலம், Alli Kamalam - இதழ்மிக்க தாமரைப் பூக்கள்
முகம் காட்டும், Mugam Kaatum - (அவர்களது) முகம்போன்று விளங்கவும் பெற்ற
கழனி, Kazhani - கழனிகளையுடைய
அழுந்தூர், Azhundhoor - திருவழுந்தூரிலே
நின்றானை, Nindraanai - எழுந்தருளியிருக்கு மெம்பிரான் விஷயமாக.-
வல்லி பொதும்பில், Valli Pothumbil - பூங்கொடிகள் மிக்க முழஞ்சுகளிலே
குயில் கூவும், Kuyil Koovum - குயில்கள் கூவப்பெற்ற
மங்கை, Mangai - திருமங்கை நாட்டுக்கு
வேந்தன், Vendan - தலைவரான
பரகாலன், Parakalan - ஆழ்வார் (அருளிச்செய்த)
சொல்லில் பொலிந்த, Sollil Polintha - நல்ல சொற்களினால் விளங்குகின்ற
தமிழ் மாலை, Tamil Maalai - இத்தமிழ்ப் பாசுரங்களை
சொல்ல, Solla - ஓதவே
பாவம், Paavam - பாவங்கள்
நில்லா, Nilla - இல்லையாய் விடும்.