திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1597 | பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சொல்களால் சம்ருத்தமாய் உள்ள தமிழ் தொடையை வாயாலே சொல்ல – பாவத்தை உண்டாக்குவதானாலும் தவிர ஒண்ணாததைச் சொல்ல பாவங்கள் தன்னடையே போம்) 10 | நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை
வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
சொல்லில் பொதிந்த தமிழ் மாலை சொல்லப் பாவம் நில்லாதே –7-5-10 | பதவுரை Show / Hideநெல்லில், Nellil - நெற்பயிரினிடையே (முளைத்த) குவளை, Kuvazhai - கருநெய்தற் பூக்கள் கண் காட்ட, Kan Kaatta - (அவ்வூர் பெண்களது) கண்கள் போன்றுவிளங்கவும் நீரில், Neeril - நீரிலே முளைத்த குமுதம், Kumudham - ஆமபல் பூக்கள் வாய் காட்ட, Vaai Kaatta - (அவர்களது) வாய் போன்று விளங்கவும் அல்லி கமலம், Alli Kamalam - இதழ்மிக்க தாமரைப் பூக்கள் முகம் காட்டும், Mugam Kaatum - (அவர்களது) முகம்போன்று விளங்கவும் பெற்ற கழனி, Kazhani - கழனிகளையுடைய அழுந்தூர், Azhundhoor - திருவழுந்தூரிலே நின்றானை, Nindraanai - எழுந்தருளியிருக்கு மெம்பிரான் விஷயமாக.- வல்லி பொதும்பில், Valli Pothumbil - பூங்கொடிகள் மிக்க முழஞ்சுகளிலே குயில் கூவும், Kuyil Koovum - குயில்கள் கூவப்பெற்ற மங்கை, Mangai - திருமங்கை நாட்டுக்கு வேந்தன், Vendan - தலைவரான பரகாலன், Parakalan - ஆழ்வார் (அருளிச்செய்த) சொல்லில் பொலிந்த, Sollil Polintha - நல்ல சொற்களினால் விளங்குகின்ற தமிழ் மாலை, Tamil Maalai - இத்தமிழ்ப் பாசுரங்களை சொல்ல, Solla - ஓதவே பாவம், Paavam - பாவங்கள் நில்லா, Nilla - இல்லையாய் விடும். |