திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1598 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1598பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவ் ஊரில் உள்ளார் உடைய ஜன்மமும் இன்றிக்கே ஸ்ரீ பிரகலதான் உடைய படியும் இன்றிக்கே இருக்கிற நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன்) 1
சிங்கமதாய் அவுணன் திரளாகம் முன் கீண்டுகந்த சங்கமிடத்தானைத் தழலாழி வலத்தானைச் செங்கமலத் தயனனை பார் தென் அழுந்தையில் மன்னி நின்ற அங்கமலக் கண்ணனை யடியேன் கண்டு கொண்டேனே –7-6-1
பதவுரை Show / Hide
முன், Mun - முன்னொருகால்,
சிங்கம் அது ஆய், Singam Adhu Aai - நரசிம்ஹ ரூபியாய்க்கொண்டு
அவுணன், Avunan - இரணியாசுரனுடைய
திறல் ஆகம், Thiral Aagam - வலிமிக்க மார்வை
கீண்டு, Keendu - இருபிளவாக்கி
உகந்த, Ugantha - திருவுள்ளமுவந்தவனும்
சங்கம் இடத்தானை, Sangam Idaththaanai - சங்கை இடத்திருக்கையிலுடையவனும்
தழல் ஆழி வலத்தானை, Thazhal Aazhi Valaththaanai - தீக்ஷ்ணமான திருவாழியை வலத்திருக்கையிலுடையவனும்
செம் கமலத்து அயன் அனையார், Sem Kamalaththu Ayan Anaiyaar - செவ்விய (திருநாயிக்) கமலத்திற் பறந்த பிரமனைப்போன்ற  பிராமணர்கள் (வாழ்கிற)
தென் அழுந்தையில் மன்னி நின்ற, Then Azhundhaiyil Manni Nindra - அழகிய திருவழுந்தூரிலே நித்யவாஸம் செய்பவனும்
அம் கமலம் கண்ணனை, Am Kamalam Kannanai - அழகிய தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடையனுமான ஆமருவியப்பனை
அடியேன் கண்டு கொண்டேன், Adiyen Kandu Konden - அடியேன் ஸேவிக்கப்பெற்றேன்.