திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1598 | பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவ் ஊரில் உள்ளார் உடைய ஜன்மமும் இன்றிக்கே ஸ்ரீ பிரகலதான் உடைய படியும் இன்றிக்கே இருக்கிற நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன்) 1 | சிங்கமதாய் அவுணன் திரளாகம் முன் கீண்டுகந்த
சங்கமிடத்தானைத் தழலாழி வலத்தானைச்
செங்கமலத் தயனனை பார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அங்கமலக் கண்ணனை யடியேன் கண்டு கொண்டேனே –7-6-1 | பதவுரை Show / Hideமுன், Mun - முன்னொருகால், சிங்கம் அது ஆய், Singam Adhu Aai - நரசிம்ஹ ரூபியாய்க்கொண்டு அவுணன், Avunan - இரணியாசுரனுடைய திறல் ஆகம், Thiral Aagam - வலிமிக்க மார்வை கீண்டு, Keendu - இருபிளவாக்கி உகந்த, Ugantha - திருவுள்ளமுவந்தவனும் சங்கம் இடத்தானை, Sangam Idaththaanai - சங்கை இடத்திருக்கையிலுடையவனும் தழல் ஆழி வலத்தானை, Thazhal Aazhi Valaththaanai - தீக்ஷ்ணமான திருவாழியை வலத்திருக்கையிலுடையவனும் செம் கமலத்து அயன் அனையார், Sem Kamalaththu Ayan Anaiyaar - செவ்விய (திருநாயிக்) கமலத்திற் பறந்த பிரமனைப்போன்ற பிராமணர்கள் (வாழ்கிற) தென் அழுந்தையில் மன்னி நின்ற, Then Azhundhaiyil Manni Nindra - அழகிய திருவழுந்தூரிலே நித்யவாஸம் செய்பவனும் அம் கமலம் கண்ணனை, Am Kamalam Kannanai - அழகிய தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடையனுமான ஆமருவியப்பனை அடியேன் கண்டு கொண்டேன், Adiyen Kandu Konden - அடியேன் ஸேவிக்கப்பெற்றேன். |