திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 160 | பெரியாழ்வார் திருமொழி || (2-4 நீராட்டம்) - நீ ஜாதிக்குத் தக்கபடி மாட்டுத் தொழுவிற் புகுந்து புழுதியளைந்து அழுக்குடம்புடனே இருந்தாலும், உனது மேனி பொன்னுக்குப் புழுதியேறினாற்போலக் குழந்தைப் பருவத்தினால் விளங்குதலால் அதைக் காண்பது எனக்கு மிகவும் விருப்பமே, என்றாலும் ‘இவள் பிள்ளை வளர்ப்பது அழகாயிருக்கிறது!’ என்று கண்டவர்கள் எல்லாரும் என்னைச் சிரிப்பார்களே, தவிரவும், நப்பின்னையும் உன்னைப் பரிஹாஸம் பண்ணுவாளே, ஆகையால் இப்போது இருப்பது போல நீ வெட்கமற்று நில்லாமல் உடனே நீராட வரவேணுமென்கிறாள். … 9 | பூணித் தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன் மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் எத்தனையும் இலாதாய் நற்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே மஞ்சனம் ஆட நீ வாராய் -2 4-9 | பதவுரை Show / Hideபூணி, Pooni - பசுக்கள் கட்டிய தொழுவினில், Thozhuvinil - கொட்டகையிலே புக்கு, Pukku - நுழைந்து புழுதி அளைந்த, Puzhuthi alaindha - புழுதி மண்ணிலளைந்து அதனால் மாசு படிந்த பொன் மேனி, Pon meni - (உனது) அழகிய உடம்பை காண, Kaana - பார்ப்பதற்கு பெரிதும், Perithum - மிகவும் உகப்பன், Ugappan - (நான்) விரும்புவேன் ஆகிலும், Aagilum - ஆனாலும் கண்டார், Kandaar - (உன்னைப்) பார்ப்பவர்கள் பழிப்பர், Pazhippar - ‘(இவள் பிள்ளை வளர்ப்பது அழகாயிருக்கி்ன்றது’ என்று என்னை) ஏசுவார்கள் எத்தனையும் நாண் இலாதாய், Yethanaiyum naan ilaadhaay - (அன்றியும்) சிறிதும் லஜ்ஜை யென்பதில்லாதவனே! நப்பின்னை, Nappinnai - நப்பின்னையானவள் காணில், Kaanil - நீ இப்படியிருப்பதைக் கண்டால் சிரிக்கும், Sirikkum - சிரிப்பாள் என் மாணிக்கமே!, En maanikkame! - (என்) மணியே! மஞ்சனம் ஆட நீ வாராய், Manjanam aada nee vaaraay - நீராட நீ வர வேணும் |