| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 160 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 9 | பூணித் தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன் மேனி காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர் நாண் எத்தனையும் இலாதாய் நற்பின்னை காணில் சிரிக்கும் மாணிக்கமே என் மணியே மஞ்சனம் ஆட நீ வாராய் -2 4-9 | பூணி, Pooni - பசுக்கள் கட்டிய தொழுவினில், Thozhuvinil - கொட்டகையிலே புக்கு, Pukku - நுழைந்து புழுதி அளைந்த, Puzhuthi alaindha - புழுதி மண்ணிலளைந்து அதனால் மாசு படிந்த பொன் மேனி, Pon meni - (உனது) அழகிய உடம்பை காண, Kaana - பார்ப்பதற்கு பெரிதும், Perithum - மிகவும் உகப்பன், Ugappan - (நான்) விரும்புவேன் ஆகிலும், Aagilum - ஆனாலும் கண்டார், Kandaar - (உன்னைப்) பார்ப்பவர்கள் பழிப்பர், Pazhippar - ‘(இவள் பிள்ளை வளர்ப்பது அழகாயிருக்கி்ன்றது’ என்று என்னை) ஏசுவார்கள் எத்தனையும் நாண் இலாதாய், Yethanaiyum naan ilaadhaay - (அன்றியும்) சிறிதும் லஜ்ஜை யென்பதில்லாதவனே! நப்பின்னை, Nappinnai - நப்பின்னையானவள் காணில், Kaanil - நீ இப்படியிருப்பதைக் கண்டால் சிரிக்கும், Sirikkum - சிரிப்பாள் என் மாணிக்கமே!, En maanikkame! - (என்) மணியே! மஞ்சனம் ஆட நீ வாராய், Manjanam aada nee vaaraay - நீராட நீ வர வேணும் |