Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 160 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
160பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 9
பூணித் தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன் மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் எத்தனையும் இலாதாய் நற்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே மஞ்சனம் ஆட நீ வாராய் -2 4-9
பூணி, Pooni - பசுக்கள் கட்டிய
தொழுவினில், Thozhuvinil - கொட்டகையிலே
புக்கு, Pukku - நுழைந்து
புழுதி அளைந்த, Puzhuthi alaindha - புழுதி மண்ணிலளைந்து அதனால் மாசு படிந்த
பொன் மேனி, Pon meni - (உனது) அழகிய உடம்பை
காண, Kaana - பார்ப்பதற்கு
பெரிதும், Perithum - மிகவும்
உகப்பன், Ugappan - (நான்) விரும்புவேன்
ஆகிலும், Aagilum - ஆனாலும்
கண்டார், Kandaar - (உன்னைப்) பார்ப்பவர்கள்
பழிப்பர், Pazhippar - ‘(இவள் பிள்ளை வளர்ப்பது அழகாயிருக்கி்ன்றது’ என்று என்னை) ஏசுவார்கள்
எத்தனையும் நாண் இலாதாய், Yethanaiyum naan ilaadhaay - (அன்றியும்) சிறிதும் லஜ்ஜை யென்பதில்லாதவனே!
நப்பின்னை, Nappinnai - நப்பின்னையானவள்
காணில், Kaanil - நீ இப்படியிருப்பதைக் கண்டால்
சிரிக்கும், Sirikkum - சிரிப்பாள்
என் மாணிக்கமே!, En maanikkame! - (என்) மணியே!
மஞ்சனம் ஆட நீ வாராய், Manjanam aada nee vaaraay - நீராட நீ வர வேணும்