திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1600 | பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நித்ய விபூதி உக்தனான சம்பத்துக்கு மேலே ஓன்று காணும் –ஸ்ரீ திரு வழுந்தூருக்கு கடவன் ஆனது – அநந்ய கதியான நான் கிட்டப் பெற்று –அசந்நேவ -என்னும் நிலை தவிர்ந்து –உஜ்ஜீவித்து –க்ருதார்த்தனாகப் பெற்றேன்) 3 | உடையானை யொலி நீர் உலகங்கள் படைத்தானை
விடையானோடே அன்று விறலாழி விசைத்தானை
அடையார் தென்னிலங்கை அழித்தானை யணி யழுந்தூர்
உடையானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே –7-6-3 | பதவுரை Show / Hideஉடையானை, Udaiyanai - ஸர்வஸ்வாமியானவனும் (- (அடியேன் அடைந்து-;-)) ஒலி நீர் உலகங்கள் படைத்தானை, Oli Neer Ulagangal Padaiththaanai - கடல் சூழ்ந்த உலகங்களைப் படைத்தவனும் அன்று, Andru - பாணாஸுர யுத்தத்தினன்று விடையான் ஓட, Vidaiyaan Oda - பரமசிவன் தோற்று ஓடும்படி விறல் ஆழி, Virhal Aazhi - வலிமிக்க திருவாழியை விசைத்தானை, Visaiththaanai - வேகமாகப் பிரயோகித்தவனும் அடையார் தென் இலங்கை அழித்தானை, Adaiyaar Then Ilangai Azhiththaanai - பகைவர் நிறைந்திருக்கிற தென்னிலங்கையை அழியச்செய்தவனும் அணி அழுந்தூர் உடையானை, Ani Azhundhoor Udaiyanai - அழகிய திருவழுந்தூரை இருப்பிடமாக வுடையனுமான பெருமானை உய்ந்து போனேன், Uyinthu Poneen - உஜ்ஜீவித்து விட்டேன். |