திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1603 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1603பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு அழுந்தூரில் உண்டான பிராமணர் ஆனவர்கள் திருவடிகளில் ஆஸ்ரயிக்கும் படியாக நிற்கிற ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –அனந்யார்ஹனான நான் கண்டு கொண்டு களிக்கப் பெற்றேன்) 6
பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும் உரியானை உகந்தான் அவனுக்கும் உணர்வதனுக்கு அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடி பணியும் கரியானை அடியேன் கண்டு கொண்டு களித்தேனே –7-6-6
பதவுரை Show / Hide
பெரியானை, Periyaanai - எல்லாசிலும் மேம்பட்டவனும் (- (அடியேன் கண்டுகொண்டு களித்தேன்-.))
அமரர் தலைவற்கும், Amarar Thalaivarkkum - தேவேந்திரனுக்கும்
பிரமனக்கும், Brahmanakkum - ப்ரஹ்மாவுக்கும்
யானை உரி உகந்தானவனுக்கும், Yaanai Uri Uganthaanavanukkum - யானைத்தோலை உகந்து திரிக்கின்ற சிவபிரானுக்கும்
உணர்வதனுக்கு அரியானை, Unarvadhanukku Ariyaanai - உள்ளபடி அறியக்கூடாதவனும்
அழுந்தூர், Azhundhoor - திருவழுந்தூரிலே
மறை யோர்கள், Marai Yorgal - வைதிகர்கள்
அடி பணியும், Adi Paniyum - திருவடிதொழப்பெற்ற
கரியானை, Kariyanai - நீலநிறத்தனுமான பெருமான