திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1603 | பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு அழுந்தூரில் உண்டான பிராமணர் ஆனவர்கள் திருவடிகளில் ஆஸ்ரயிக்கும் படியாக நிற்கிற ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –அனந்யார்ஹனான நான் கண்டு கொண்டு களிக்கப் பெற்றேன்) 6 | பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும்
உரியானை உகந்தான் அவனுக்கும் உணர்வதனுக்கு
அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடி பணியும்
கரியானை அடியேன் கண்டு கொண்டு களித்தேனே –7-6-6 | பதவுரை Show / Hideபெரியானை, Periyaanai - எல்லாசிலும் மேம்பட்டவனும் (- (அடியேன் கண்டுகொண்டு களித்தேன்-.)) அமரர் தலைவற்கும், Amarar Thalaivarkkum - தேவேந்திரனுக்கும் பிரமனக்கும், Brahmanakkum - ப்ரஹ்மாவுக்கும் யானை உரி உகந்தானவனுக்கும், Yaanai Uri Uganthaanavanukkum - யானைத்தோலை உகந்து திரிக்கின்ற சிவபிரானுக்கும் உணர்வதனுக்கு அரியானை, Unarvadhanukku Ariyaanai - உள்ளபடி அறியக்கூடாதவனும் அழுந்தூர், Azhundhoor - திருவழுந்தூரிலே மறை யோர்கள், Marai Yorgal - வைதிகர்கள் அடி பணியும், Adi Paniyum - திருவடிதொழப்பெற்ற கரியானை, Kariyanai - நீலநிறத்தனுமான பெருமான |