திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1604 | பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு வழுந்தையிலே நித்ய வாஸம் பண்ணுகிற –அடி உடைத்தான கல்பகம் ஆய்த்து- ஸ்வர்க்கத்திலே நிராலம்பநமாக நிற்கிறது அன்றிக்கே பூமியிலே வேர்ப் பற்று உண்டான கற்பகத்தைக் கண்டு கொண்டு என் சர்வ அபேஷிதங்களையும் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன்) 7 | திருவாழ் மார்பன் தன்னைத் திசை மண் எரி நீர் முதலா
உருவாய் நின்றவனை யொலி சேரும் மாருதத்தை
அருவாய் நின்றவனைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
கருவார் கற்பகத்தைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-7 | பதவுரை Show / Hideதிரு வாழ் மார்வன் தன்னை, Thiru Vaal Marvan Thannai - பிராட்டி வாழ்கிற திருமார்பை யுடையவனும் (- (தென் அழுந்தையில் மன்னி நி்ன்ற-;) (கண்டுகொண்டு களித்தேன்-.)) திசை மண் நீர் எரி முதலா, Thisai Mann Neer Eri Muthalaa - திக்குகளென்ன பூமியென்ன ஜலமென்ன அக்னியென்ன ஆகிய இவை முதலான உரு ஆய் நின்றவனை, Uru Aayi Nindra Vanai - பதார்த்தங்களாய் நிற்பவனும் ஒலி சேரும் மாருதத்தை, Oli Serum Maarudhatthai - சப்தத்தையும் குணமாகவுடைய வாயுவுக்கு நிர்வாஹகனும் அரு ஆய் நின்றவனை, Aru Aayi Nindra Vanai - அரூபியாயிருப்பவனும் கரு ஆர் கற்பகத்தை, Karuu Aar Karppagaththai - வேர்ப்பற்றையுடைத்தான கல்பவ்ருக்ஷம் போன்றவனுமான பெருமானை |