திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1604 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1604பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு வழுந்தையிலே நித்ய வாஸம் பண்ணுகிற –அடி உடைத்தான கல்பகம் ஆய்த்து- ஸ்வர்க்கத்திலே நிராலம்பநமாக நிற்கிறது அன்றிக்கே பூமியிலே வேர்ப் பற்று உண்டான கற்பகத்தைக் கண்டு கொண்டு என் சர்வ அபேஷிதங்களையும் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன்) 7
திருவாழ் மார்பன் தன்னைத் திசை மண் எரி நீர் முதலா உருவாய் நின்றவனை யொலி சேரும் மாருதத்தை அருவாய் நின்றவனைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற கருவார் கற்பகத்தைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-7
பதவுரை Show / Hide
திரு வாழ் மார்வன் தன்னை, Thiru Vaal Marvan Thannai - பிராட்டி வாழ்கிற திருமார்பை யுடையவனும் (- (தென் அழுந்தையில் மன்னி நி்ன்ற-;) (கண்டுகொண்டு களித்தேன்-.))
திசை மண் நீர் எரி முதலா, Thisai Mann Neer Eri Muthalaa - திக்குகளென்ன பூமியென்ன ஜலமென்ன அக்னியென்ன ஆகிய இவை முதலான
உரு ஆய் நின்றவனை, Uru Aayi Nindra Vanai - பதார்த்தங்களாய் நிற்பவனும்
ஒலி சேரும் மாருதத்தை, Oli Serum Maarudhatthai - சப்தத்தையும் குணமாகவுடைய வாயுவுக்கு நிர்வாஹகனும்
அரு ஆய் நின்றவனை, Aru Aayi Nindra Vanai - அரூபியாயிருப்பவனும்
கரு ஆர் கற்பகத்தை, Karuu Aar Karppagaththai - வேர்ப்பற்றையுடைத்தான கல்பவ்ருக்ஷம் போன்றவனுமான பெருமானை