திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1606 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1606பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு அழுந்தூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற – கார் காலத்திலேயே மேகம் போலே ஸ்ரமஹரமான வடிவு அழகை உடையவனை – கண்கள் குளிரக் காணப் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன்) 9
பேரானைக் குடந்தை பெருமானை இலங்கொளி சேர் வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை ஆராவின்னமுதைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற காரர் கரு முகிலைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-9
பதவுரை Show / Hide
பேரானை, Peraanai - திருப்பேர்நகரில் பள்ளி கொண்டிருப்பவனும (- (தென் அழுந்தையில் மன்னி நின்ற-) (கண்டுகொண்டு களித்தேன்-.))
குடந்தை பெருமானை, Kudandhai Perumaanai - திருக்குடந்தையில் தன் பெருமைகளெல்லாந் தோற்ற சயனித் திருப்பவனும்
இலங்கு ஒளி சேர், Ilangu Oli Ser - விளங்குகின்ற காந்தியோடு கூடின
வார் ஆர், Vaar Aar - கச்சுநிறைந்த
வனம் முலையாள், Vanam Mulaiyal - அழகிய முலைகளையுடைளான
மலர்மங்கை, Malar Mangai - பெரிய பிராட்டியார்க்கு
நாயகனை, Nayakanai - வல்லபனும்
ஆரா இன் அமுதை, Aara In Amuthai - எவ்வளவு அநுபவித்தாலும் த்ருப்திபெறமுடியாத இனிய அமுதம் போன்றவனும்
கார் ஆர் கரு முகிலை, Kaar Ar Karu Mukilai - மழை காலத்துக் காளமேகம் போன்றவனுமான பெருமானை