திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1607 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1607பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அடைவில் தப்பாதபடி அனுசந்திக்க வல்லவர்கள்-ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே த்ரிபாத் விபூதி அடையத் தாங்கள் இட்ட வழக்காகப் பெறுவர்கள்) 10
திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற அறமுதல் ஆனவனை யணி யாலியர் கோன் மருவார் கறை நெடுவேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும் முறை வழுவாமை வல்லார் முழுதாள்வர் வானுலகே –7-6-10
பதவுரை Show / Hide
திறல் முருகன் அனையார், Thiral Murugan Anaiyar - வலிமையில் ஸுப்ரஹ்மண்யன் போன்றவாகள் நிறைந்த (- (தென் அழுந்தையில், மன்னி நின்ற-;))
அறம் முதல்வனவனை, Aram Muthalvanavanai - ஸகலதர்மங்களுக்கும் மூலகாரணமான பெருமாள் விஷயமாக,
அணி ஆலியர் கோன், Ani Aliyar Kon - அழகிய திருவாலிப்பதியிலுள்ளார்க்குத் தலைவராய்
மருவார், Maruvar - பகைவருடைய
கறை, Karai - ரக்தக்கறையையுடைத்தான
நெடுவேல், Neduvel - நீண்டவேற்படையை
வலவன், Valavan - ஆளவல்லவரான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார்
சொல், Sol - அருளிச்செய்ய
ஐ இரண்டும், Ai Irandum - இப்பத்துப்பாசுரங்களையும்
முறை வழுவாமை, Murai Vazhuvamai - முறைதப்பாமல்
வல்லார், Vallar - ஓதவல்லவர்கள்
வான் உலகு, Vaan Ulagu - பாரமபதத்தை
முழுது, Muzhuthu - பூர்ணமாக
ஆள்வர், Aalvar - ஆளப்பெறுவர்.