| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 161 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 10 | கார்மலி மேனி நிறத்து கண்ண பிரானை உகந்து வார்மலி கொங்கை யசோதை மஞ்சனம் ஆட்டியவாற்றை பார்மலி தொல் புதுவைக் கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல் சீர்மலி செம்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே -2-4 10 | கார், Kaar - காளமேகத்திற் காட்டிலும் மலி, Mali - சிறந்த மேனி நிறத்து, Meni nirathu - திரு மேனி நிறத்தை யுடைய கண்ண பிரானை, Kanna piranai - கண்ண பிரானை உகந்து, Ugandhu - விரும்பி வார்மலி, Vaarmali - கச்சுக்கு அடங்காமல் விம்முகின்ற கொங்கை, Kongai - ஸ்தனங்களையுடைய அசோதை, Asothai - யசோதைப் பிராட்டி மஞ்சனம் ஆட்டிய, Manjanam aattiya - நீராட்டின ஆற்றை, Aattrai - ப்ரகாரத்தை பார், Paar - பூமியிலே மலி, Mali - சிறந்த தொல், Thol - பழமையான புதுவை, Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு கோன், Kon - நிர்வாஹகரான பட்டர் பிரான், Pattar piran - பெரியாழ்வார் சொன்ன, Sonna - அருளிச் செய்த சீர்மலி, Seermali - அழகு நிறைந்த செந்தமிழ், Sendhamizh - செந்தமிழாலாகிய பாடல், Paadal - (இப்) பாசுரங்களை வல்லார், Vallaar - ஓத வல்லவர்கள் யாதும், Yaadhum - சிறிதும் தீவினை இலர், Theevinai ilar - பாவமில்லாதவராவர் |