Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 161 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
161பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 10
கார்மலி மேனி நிறத்து கண்ண பிரானை உகந்து
வார்மலி கொங்கை யசோதை மஞ்சனம் ஆட்டியவாற்றை
பார்மலி தொல் புதுவைக் கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல்
சீர்மலி செம்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே -2-4 10
கார், Kaar - காளமேகத்திற் காட்டிலும்
மலி, Mali - சிறந்த
மேனி நிறத்து, Meni nirathu - திரு மேனி நிறத்தை யுடைய
கண்ண பிரானை, Kanna piranai - கண்ண பிரானை
உகந்து, Ugandhu - விரும்பி
வார்மலி, Vaarmali - கச்சுக்கு அடங்காமல் விம்முகின்ற
கொங்கை, Kongai - ஸ்தனங்களையுடைய
அசோதை, Asothai - யசோதைப் பிராட்டி
மஞ்சனம் ஆட்டிய, Manjanam aattiya - நீராட்டின
ஆற்றை, Aattrai - ப்ரகாரத்தை
பார், Paar - பூமியிலே
மலி, Mali - சிறந்த
தொல், Thol - பழமையான
புதுவை, Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
கோன், Kon - நிர்வாஹகரான
பட்டர் பிரான், Pattar piran - பெரியாழ்வார்
சொன்ன, Sonna - அருளிச் செய்த
சீர்மலி, Seermali - அழகு நிறைந்த
செந்தமிழ், Sendhamizh - செந்தமிழாலாகிய
பாடல், Paadal - (இப்) பாசுரங்களை
வல்லார், Vallaar - ஓத வல்லவர்கள்
யாதும், Yaadhum - சிறிதும்
தீவினை இலர், Theevinai ilar - பாவமில்லாதவராவர்