திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1618 | பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தனித் தனியே பிரஹ்மாவைப் போலே சிருஷ்டிக்க ஷமராய் இருக்கிற பிராமணர் நித்ய வாஸம் பண்ணுகையாலே வந்த நிரவதிக சம்பத்தை உடைய ஸ்ரீ திரு வழுந்தூரிலே வந்து நின்று அருளின இது தான் அலாப்யலாபமாகக் கொண்டு நிற்கிறவன் – அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடி கோள்-அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கப் போகப் பாருங்கோள்) 1 | செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த
வங்கமலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அங்கமலத் தயன் அனையார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-1 | பதவுரை Show / Hideஎங்கும் மலி நிறை புகழ் நால் வேதம், Engum Mali Nirai Pugazh Naal Vedham - எவ்விடத்திலும் நிறைந்து பரவிய கீர்த்தியையுடைய நான்கு வேதங்களும் (- (உலகத்தவர்களே!)) ஐந்து வேள்விகளும், Ainthu Velvikalum - பஞ்சமஹாயஜ்ஞங்களும் கேள்விகளும், Kelvigalum - (மற்றும் இன்றியமையாத)நூற்கேள்விகளும் (ஆகிய இவற்றை) இயன்ற, Iyanra - இயற்கையாகவே அறிந்துள்ள தன்மை, Thanmai - குணத்தையுடையராய் அம் கமலத்து அயன் அனையார், Am Kamalathu Ayan Anaiyar - (எம்பெருமானுடைய) அழகிய நாபீ கமலத்தில் தோன்றியவனாகிய பிரமனையொத்தவரான அந்தணர்கள் பயிலும், Payilum - நித்யவாஸஞ்செய்கிற செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய அணி, Ani - அழகிய அழுந்தூர், Azhundhoor - திருவழுந்தூரில் நின்று, Ninru - வந்துநின்று உகந்த, Ugantha - (அத்தலத்தில் வாழ்க்கையையே பெறாப் பேறாக நினைத்து) அகமகிழ்கின்ற அமரர் கோ, Amarar Ko - நித்யஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமான் (யாவனென்னில்,) செம் கமலம் திரு மகளும், Sem Kamalam Thiru Magalum - செந்தாமரை மலரில் வாழ்கின்ற ஸ்ரீதேவியும் புவியும் – பூமிதேவியும் செம் பொன் தனது திரு அடியின் இணை வருட, Sem Pon Thanathu Thiru Adiyin Inai Varud - (தனது) சிவந்த பொன்மயமான இரண்டு திருவடிகளையும் தடவவும் முனிவர் ஏத்த, Munivar Aettha - மஹர்ஷிகள் புகழ்ந்து துதிக்கவும் வங்கம் மலி தட கடலுள் –, Vangam Mali Thada Kadalul - அலைகள் நிரம்பிய பெரிய திருப்பாற்கடலில் அனந்தன் என்னும் வரி அரவின், Ananthan Ennum Vari Aravin - திருவனந்தாழ்வானென்கிற புள்ளிகளை யுடைய ஸர்ப்பசயனத்தில் துயின்ற, Thuyindra - (பள்ளி கொண்டு) யோக நித்திரை செய்கின்ற மாயோன், Mayon - ஆச்சரியமான குணமுடையவன்;;; காண்மின், Kaanmin - காணுங்கள் |