திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1623 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1623பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் கையில் தான் நீர் ஏற்றுப் பெற்று அந்த திருவடிகளின் கீழே ஏழு வகைப் பட்ட லோகங்களும் அடங்கும்படிக்கு ஈடாக வளர்ந்து –அத்விதீயமாய் ஆயதங்களுக்கு எல்லாம் பிரதாநமாய் இருக்கிற திரு ஆழியைப் பரிகரமாக உடையவனான என் ஸ்வாமி கிடி கோள்) 6
வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டித் தானமர வேழலகு மளந்த வென்றித் தணி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின் தேனமரும் பொழில் தழுவும் எழில் கோள் வீதிச் செழு மாட மாளிகைகள் கூடம் தோறும் ஆனதொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-6
பதவுரை Show / Hide
தேன் அமரும், Then Amarum - தேன் எப்போதும் பொருந்தியுள்ள (- அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோ-; (யாவனென்னில்;) (அவனாற் கொடுக்கப்பட்டவுடனே))
பொழில் தழுவும், Pozhil Thazhuvum - சோலைகளாற் சூழப்பட்ட
எழில் கொள், Ezil Kol - அழகைக் கொண்ட
வீதி, Veethi - தெருக்களிலேயுள்ள
செழு மாடம் மாளிகைகள், Sezhu Maadam Maaligaihal - செழித்த உபரிகை வீடுகளிலும் சிறந்த வீடுகளிலும்
கூடம் தோறும், Koodam Thoram - மற்றுமுள்ள இடங்களிலும்
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும், Aan Thol Seer Maraiyalar Payilum - கல்வி யொழுக்கங்களாற் சிறப்புப் பொருந்திப் பழமையான கீர்த்தியை யுடைய வேதம்வல்ல அந்தணர்கள் நெருங்கி வஸிக்கப்பெற்ற
செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய
துயர் தீர, Thuyar Theera - வருத்தம் நீங்கும்படி
வந்து தோன்றி, Vandhu Thondri - (வாமநனாய்) வந்து அவதரித்து
மாண் உரு ஆய், Maan Uru Aayi - பிரமசாரியாய்
மா வலியை மூ அடி வேண்டி, Maa Valiyai Moo Adi Vendi - மஹாபலியினிடத்தில் மூன்றடி நிலத்தை வேண்டிப்பெற்று
தான், Thaan - தானே
அமர, Amara - (தனது காலடியின் கீழ்) அடங்கும்படி
ஏழ் உலகும் அளந்த, Ezhu Ulagum Alandha - கீழேழ் மேலேழ் என்னம் எல்லா வுலகங்களையும் அளந்து தனதாக்கிக்கொண்ட
வென்றி தனி முதல் சக்கரம் படை, Vendri Thani Mudhal Chakkaram Padai - வெற்றியையுடையதும் ஒப்பற்றதும் (ஆயுதங்களிற்) பிரதானமுமான சக்ராயுதத்தைக் கையிலேந்திய
எம் தலைவன், Em Thalaivan - எமது ஸ்வாமியாவன்.