திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1627 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1627பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ வித ரஷணங்களையும் பண்ணும் இடத்தில்தன்னை எண்ணினால் பின்னை ஒருவரையும் எண்ணாது இருக்கிற சர்வாதிகனை –ஸ்ரீ திரு வழுந்தூரிலே நின்று அருளின சர்வாதிகன் ஆனவனை – இப்பத்தையும் வல்லார்-ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும்-என்று தாம் சேர்த்து அனுபவித்த பிரகாரம் இருக்கிறபடி – முதல் பாட்டு -ஸ்ரீ ஷீரார்ணவம்/ 2-4-5-10—திர்யக் திருவவதாரம் -நான்கு பாடல்களிலும் ஸ்ரீ கஜேந்திர ரஷணம் ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண திரு வவதாரம் -மீது ஐந்து பாசுரங்கள் இவற்றை அப்யசிக்க வல்லாருக்கு ப்ரஹ்மாதிகள் உடைய பதம் உண்டாக முன்னம் தட்டில்லை – ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் தாம் பாகவத சேஷத்வம் ஆக்குகைக்கு உடலாய் இருக்கையாலே ஐஸ்வர் யத்தையும் ஆதரித்து அருளினார் என்று அருளிச் செய்வர்) 10
பன்றியாய் மீனாகி யரியாய் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலி கன்றி ஒலி செய்த இன்பப் பாடல் ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகாளும் உம்பர் தாமே –7-8-10
பதவுரை Show / Hide
அன்று, Andru - முன்பொருகாலத்தில்
பன்றி ஆய், Panri Aayi - வராஹாவதாரமாகியும்
மீன் ஆகி, Meen Aagi - மத்ஸ்யாவதாரமாகியும்
அரி ஆய், Ari Aay - நரஸிம்ஹாவதாரமாகியும்
பாரை, Paarai - நிலவுலகத்தை
படைத்து, Padaithu - ஸ்ருஷ்டித்தும்
காத்து, Kaathu - ரக்ஷித்தும்
உண்டு, Undu - பிரளய காலத்தில் உட்கொண்டும்
உமிழ்ந்த, Umizhndha - (அந்தப்பிரளயம் நீங்கினவாறே வெளிநாடுகாண) உமிழ்ந்துமருளிய
பரமன் தன்னை, Paraman Thannai - பரம்பொருளானவனும்
அமரர்க்கு அதிபதியும், Amararukku Adhipathiyum - தேவர்கட்குத் தலைவனான இந்திரனென்ன
அயனும், Ayanum - பிரம்மதேவனென்ன
சேயும், Seyum - அவனது மகனான சிவபிரானென்ன ஆகிய இவர்கள்
அடிபணிய, Adhipaniya - தனது திருவடிகளை வணங்கும்படி
அணி அழுந்தூர் நின்ற, Ani Azhundhoor Nindra - திருவழுந்தூரில் நின்ற திருக்கோலமாக எழுந்தருளியிருக்கிற
கோவை, Kovai - தேவாதிதேவனுமான எம்பெருமானைப்பற்றி
கன்றி நெடு வேல் வலவன், Kandri Nedhu Vel Valavan - சினங்கொண்டு நீண்டுள்ள வேற்படையில் வல்லவரும்
ஆலி நாடன், Aali Naadan - திருவாலிநாட்டுக்குத் தலைவரும்
கலிகன்றி, Kalikanri - கலிகன்றியென்னும் திருநாமமுடையவருமான திருமங்கை யாழ்வார்
ஒலிசெய்த, Oliseitha - இன்னோசையுடையனவாம்படி பாடியருளிய
இன்பம் பாடல், Inbam Paadal - மதுரமான பாடல்களான
ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும், Ondrinodu Naangum Oru Aindhum - இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார், Vallar - ஓதியுணர்ந்தவர்கள்
ஒலிகடல் சூழ், Olikaadal Soozh - ஒலிக்கின்ற கடலாற் சூழப்பட்ட
உலகு, Ulaku - இவ்வுலகங்களை
ஆளும், Aalum - ஆளவல்ல
உம்பர் தாம், Umbar Thaam - தேவர்களாவர்.