திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1628 | பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உகந்து அருளின நிலங்களும் இவர் திரு உள்ளமும் ஒக்க வாய்த்து அவன் விரும்பி இருப்பது – இப்படி இருக்கையாலே ஆஸ்ரயிப்பாருக்கு ஆஸ்ரயநீய ஸ்தானம் இவை இரண்டும் யாய்த்து – சல சயனன் -என்றது-அது அவனுக்குத் திரு நாமமாய்-ஜல சயனன் வர்த்திக்கிற இடம் சல சயனம் என்று ஊருக்கு பெயராகிறது) 1 | கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர்
வெள்ளம் முது பரவைத் திரை விரியக் கரையெங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறு புலியூர்ச் சல சயனத்
துள்ளும் எனதுள்ளத் துள்ளும் உறைவாரை உள்ளீரே –7-9-1 | பதவுரை Show / Hideமனம், Manam - மனத்தில் நின்றும் கள்ளம், Kallam - க்ருத்ரிமச்செயல் விள்ளும் வகை கருதி, Vizhllum Vagai Karuthi - விட்டு நீங்கவேண்டும் வகையை விரும்பி கழல் தொழுவீர், Kazhal Thozuveer - (எம்பெருமானுடைய) திருவடிகளை ஆச்ரயிக்க வேண்டியிருக்கிறவர்களே! முது பரவை, Muthu Paravai - பழையதான கடலினுடைய திரை, Thirai - அலைகளினாலுண்டான வெள்ளம், Vellam - ப்ரவாஹமானது கரை எங்கும் விரிய, Karai Engum Viriya - கரைகளிலெல்லாம் பரவாநிற்க, தெள்ளும், Thellum - (அவ்வலைகளினால்) கொழிக்கப்பட்ட மணி, Mani - ரத்ணங்கள் திகழும், Thigazhume - விளங்கப்பெற்ற சிறுபுலியூர், Sirupuliyoor - சிறுபுலியூரில் சலசயனத் துள்ளும், Salasayanath Thullum - சலசயனமென்கிற ஸந்நிதியினுள்ளும் எனது உள்ளத் துள்ளும், Enathu Ullath Thullum - என்னுடைய ஹ்ருதயத்தினுள்ளும் உறைவாரை, Uraivaarai - நித்யவாஸம் பண்ணுகிற பெருமானை உள்ளீர், Ullir - சிந்தனை செய்யுங்கள். |