திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1629 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1629பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அழகியதாய் கண்டார்க்கு மேல் விழும்படியான வடிவை உடைய ஸ்ரீ வாமனன் ஆன ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய திருவடிகளை ஸ்மரியுங்கோள்) 2
தெருவில் திரி சிறு நோன்பியர் செஞ்சோற்றோடு கஞ்சி மருவிப் பிரிந்தவர் வாய் மொழி மதியாது வந்து அடைவீர் திருவில் பொலி மறையோர் சிருபுலியூர்ச் சல சயனத்து உருவக் குறளடிகள் அடி யுணர்மின் யுணர்வீரே –7-9-2
பதவுரை Show / Hide
உணர்வீர், Unarveer - விவேகிகளே!, (- (சிறுபுலியூர், சலசயனத்து-,))
தெருவில், Theruvil - (வேலையற்றுத்) தெருக்கள் தோறும் திரிகின்றவர்களாய்
சிறு நோன்பியர், Siru Nonpiyar - அற்பங்களான விரதங்களைக் கைக்கொண்டவர்களாய்
நெஞ் சோற்றொடு கஞ்சி மருவி, Nenj Sotrrodu Kanjimaruvi - செஞ்சோற்றையும் கஞ்சியையுமுண்ண விரும்பி
பிரிந்தவர், Pirindhavar - வைதிக கோஷ்டியிற் சேராதே தனிப்பட்டுப் பிரிந்தவர்களான ஜைநர் முதலானாருடைய
வாய் மொழி, Vaai Mozhi - வாய்ப்பேச்சுகளை
மதியாது, Madhiyadhu - திரஸ்கரித்து விட்டு
வந்து அடைவீர், Vandhu Adaiveer - (எம்பெருமானளவிலே) வந்து சேருங்கள்;
திருவில், Thiruvil - செல்வத்தினால்
பொலி, Poli - விளங்குகின்ற
மறையோர், Maraiyore - வைதிகர்கள் வாழ்கிற
உருவம், Uruvam - அழகிய
குறள், Kural - வாமநாவதாரஞ்செய்தருளிய
அடிகள், Adigal - ஸ்வாமியினுடைய
அடி, Adi - திருவடிகளை
உணர்மின், Unarmin - சிந்தியுங்கள்