திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1629 | பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அழகியதாய் கண்டார்க்கு மேல் விழும்படியான வடிவை உடைய ஸ்ரீ வாமனன் ஆன ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய திருவடிகளை ஸ்மரியுங்கோள்) 2 | தெருவில் திரி சிறு நோன்பியர் செஞ்சோற்றோடு கஞ்சி
மருவிப் பிரிந்தவர் வாய் மொழி மதியாது வந்து அடைவீர்
திருவில் பொலி மறையோர் சிருபுலியூர்ச் சல சயனத்து
உருவக் குறளடிகள் அடி யுணர்மின் யுணர்வீரே –7-9-2 | பதவுரை Show / Hideஉணர்வீர், Unarveer - விவேகிகளே!, (- (சிறுபுலியூர், சலசயனத்து-,)) தெருவில், Theruvil - (வேலையற்றுத்) தெருக்கள் தோறும் திரிகின்றவர்களாய் சிறு நோன்பியர், Siru Nonpiyar - அற்பங்களான விரதங்களைக் கைக்கொண்டவர்களாய் நெஞ் சோற்றொடு கஞ்சி மருவி, Nenj Sotrrodu Kanjimaruvi - செஞ்சோற்றையும் கஞ்சியையுமுண்ண விரும்பி பிரிந்தவர், Pirindhavar - வைதிக கோஷ்டியிற் சேராதே தனிப்பட்டுப் பிரிந்தவர்களான ஜைநர் முதலானாருடைய வாய் மொழி, Vaai Mozhi - வாய்ப்பேச்சுகளை மதியாது, Madhiyadhu - திரஸ்கரித்து விட்டு வந்து அடைவீர், Vandhu Adaiveer - (எம்பெருமானளவிலே) வந்து சேருங்கள்; திருவில், Thiruvil - செல்வத்தினால் பொலி, Poli - விளங்குகின்ற மறையோர், Maraiyore - வைதிகர்கள் வாழ்கிற உருவம், Uruvam - அழகிய குறள், Kural - வாமநாவதாரஞ்செய்தருளிய அடிகள், Adigal - ஸ்வாமியினுடைய அடி, Adi - திருவடிகளை உணர்மின், Unarmin - சிந்தியுங்கள் |