திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1631 | பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தம்மை அவர்கள் ஆப்தராக நினைத்து இருக்கிறபடியால் தாம் சொல்லிற்று கேட்பார்கள் -என்று பார்த்து தம்படியை அவர்களுக்கு அறிவித்து-நீங்களும் என்னைப் போலே அவனைக் கொண்டு உங்கள் விரோதிகளைப் போக்கிக் கொள்ளப் பாருங்கோள் என்கிறார்) 4 | வானார் மதி பொதியும் சடை மழுவாளி யொடு ஒருபால்
தானாகிய தலைவனவன் அமரர்க்கு அதிபதியாம்
தேனார் பொழில் தழுவும் சிறு புலியூர் சல சயனத்
தானாயனது அடி அல்லது ஓன்று அறியேன் அடியேனே –7-9-4 | பதவுரை Show / Hideஒருபால், Orupaal - திருமேனியினொரு பக்கத்தில் (- (அடியேன் அறியேன்-)) வான் ஆர் மதி பொதியும் சடை, Vaan Aar Mathi Pothiyum Sadai - ஆகாசத்திலே பொருந்தி யிருக்கிற சந்திரன் அடங்கிய ஜடையை யுடையவனாய் மழுவாளி யொடு, Mazhuvaali Yodu - மழுவேந்தியான சிவனோடு கூடி தான் ஆகிய தலைவன் அவன், Thaan Aagiya Thalaivan Avan - தான் என்று சொல்லப்படும் தலைவனாயிருப்பவனும் அமரர்க்கு அதிபதி ஆம், Amararukku Adhipathi Aam - தேவர்கட்கு இறைவனான இந்திரனும் தானாயிருப்பவனும், தேன் ஆர் பொழில் தழுவும், Then Aar Pozhil Thazhuvum - தேன் நிறைந்த சோலைகள் தழுவப்பெற்ற சிறுபுலியூர், Sirupuliyoor - திருச்சிறுபுலியூரிலே சலசயனத்து, Salasayanathu - சலசயனமென்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனுமான ஆன் ஆயனது, Aan Aayanathu - கோபாலக்ருஷ்ணனுடைய அடி அல்லது, Adi Allathu - திருவடிகளையன்றி ஒன்று, Ondru - மற்றொன்றையும் |