திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1632 | பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அல்லாதார் செய்தபடி செய்ய அநந்ய கதியான என் பக்கலிலே உன்னுடைய கண் அழிவற்ற கிருபையைப் பண்ணி அருள வேணும்) 5 | நந்தா நெடு நரகத்திடை நணுகா வகை நாளும்
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறிநீர்ச்
செந்தாமரை மலரும் சிறு புலியூர்ச் சலசயனத்து
அந்தாமரை யடியாய் உனதடியேற்கு அருள் புரியே –7-9-5 | பதவுரை Show / Hideஇமையோர், Imaiyor - தேவர்கள் நாளும், Naalum - நாள்தோறும் எந்தாய் என, Endhai Enna - எம்பெருமானே! என்று சொல்லி தொழுது, Thozhudhu - அடிபணிந்து ஏத்தும், Aethum - துதிக்கப்பெற்ற இடம், Idam - திவ்யதேசமாய் எறி நீர் செந்தாமரை மலரும் சிறுபுலியூர், Eri Neer Senthamarai Malarum Sirupuliyur - அலைமோதும் நீர் நிலைகளிலே செந்தாமரைப் பூக்கள் மலரப்பெற்றதான சிறுபுலியூரிலுள்ளதான சலசயனத்து, Salasayanathu - சலசயனக்கோயிலிலே (எழுந்தருளியிருக்கிற) அம் தாமரை அடியாய், Am Thamarai Adiyaai - அழகிய தாமரைப் பூப்போன்ற திருவடிகளை யுடையவனே! நந்தா நெடு நரகத்திடை, Nandha Nedu Naragathidai - அழிவில்லாத பெரிய நரகத்திலே நணுகாவகை, Nanugavakai - (நான்) சேராதபடி உனது அடியேற்கு அருள் புரி, Unathu Adiyerku Arul Puri - உன் அடியானான என் திறத்தில் க்ருபை பண்ணவேணும், |