திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1633 | பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சிறுபுலியீர்ச் சலசயனத்தை தொழுகையே ஸ்வபாவமாக உடையாருடைய திருவடிகளைத் தொழுவார்க்கு துக்கங்கள் நில்லா –அவை தன்னடியே விட்டுப் போம்) 6 | முழு ஆம்பலும் அலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவிக்
கழுநீரொடு மடவாரவர் கண் வாய் முக மலரும்
செழுநீர் வயல் தழுவும் சிறுபுலியீர்ச் சலசயனம்
தொழு நீர்மை யது உடையார் அடி தொழுவார் துயர் இலரே –7-9-6 | பதவுரை Show / Hideமுழு நீலமும், Muzhu Neelamum - பூர்த்தியாகக் கறுத்திருக்கிற நீலோற்பவமும் (- (சிறுபுலியூர், சலசயனத்தை-,)) ஆம்பல் மலரும், Aambal Malarum - ஆம்பல் மலர்களும் அரவிந்தமும், Aravindhamum - தாமரைகளும் கழுநீரொடு, Kazhunirodu - செங்கழுநீர்ப் பூக்களும் விரவி, Viravi - சேர்ந்து மடவாரவர், Madavaaravar - (அங்குள்ள) மாதர்களினுடைய கண், Kan - கண்கள் போலவும் வாய், Vaai - அதரம் போலவும் முகம், Mugam - முகம் போலவும் அலரும், Alarum - விகஸிக்கப்பெற்ற செழு நீர் வயல், Sezhu Neer Vayal - செழித்த நீர் நிறைந்த வயல்களினால் தழுவும், Thazhuvum - சுற்றுஞ் சூழப்பட்ட தொழும் நீர்மையது உடையார், Thozhum Neermaiyathu Udaiyaar - தொழுகையையே ஸ்வபாவமாக வுடையவர்களினுடைய அடி, Adi - திருவடிகளை தொழுவார், Thozhuvar - தொழுமவர்கள் துயர் இலர், Thuyar Ilan - துக்கமற்றவரார். |