திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1635 | பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அனுபவ ஜனித ப்ரீதிக்குப் போக்கு விடுகைக்கு பலவாய்த் தலைகளை உடையனாய் சைத்யாதிகளை பிரக்ருதியாக உடைய ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளி பிரயோஜன நிரபேஷமாக ரஷணத்திலே ஒருப் பட்டு இருக்கிறவனே – என் பக்கலிலே உன்னுடைய கிருபையைப் பண்ணி அருள வேணும்) 8 | மையார் வரிநீல மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு
உய்வான் உன கழலே தொழுது எழுவேன் கிளி மடவார்
செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
ஐவாய அரவணை மேல் உறை யமலா யருளாயே –7-9-8 | பதவுரை Show / Hideகிளி, Kili - கிளிகளானவை மடவார், Madavaar - ஸ்த்ரீகளினுடைய செவ்வாய், Sevvaai - சிவந்த வாயில் நின்று முண்டான மொழி, Mozhi - சொற்களை பயிலும், Payilum - ஆவ்ருத்திபண்ணாநின்ற சிறுபுலியூர்,, Siru Puliyur - சலசயனத்து-; ஐ வாய், Ai Vaai - ஐந்து வாயையுடைய அரவு அணை மேல், Aravu Anai Mael - அதிசேஷனாகிற சயனத்தில் மீது உறை, Urai - உறைகின்ற அமலா, Amalaa - நின்மலனே! மை ஆர், Mai Aar - அயணிந்ததாய் வரி, Vari - ரேகைகளையுடைத்தாய் நீலம் மலர், Neelam Malar - கரு நெய்தல் பூப்போன்றதான கண்ணார், Kannaar - கண்ணையுடையரான மாதர்களிடத்திலே மனம், Manam - மனத்தை விட்டிட்டு, Vittittu - விட்டொழித்து உய்வான், Uyvaan - உஜ்ஜீவிப்பதற்காக உன கழலே, Un Kazhale - உனது திருவடிகளையே தொழுது எழுவேன், Thozhudhu Ezhuvein - வணங்கியெழுகின்றேன்; அருளாய், Arulai - (அடியேன் மீது) க்ருபை செய்தருள். |