திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1635 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1635பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அனுபவ ஜனித ப்ரீதிக்குப் போக்கு விடுகைக்கு பலவாய்த் தலைகளை உடையனாய் சைத்யாதிகளை பிரக்ருதியாக உடைய ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளி பிரயோஜன நிரபேஷமாக ரஷணத்திலே ஒருப் பட்டு இருக்கிறவனே – என் பக்கலிலே உன்னுடைய கிருபையைப் பண்ணி அருள வேணும்) 8
மையார் வரிநீல மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு உய்வான் உன கழலே தொழுது எழுவேன் கிளி மடவார் செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சல சயனத்து ஐவாய அரவணை மேல் உறை யமலா யருளாயே –7-9-8
பதவுரை Show / Hide
கிளி, Kili - கிளிகளானவை
மடவார், Madavaar - ஸ்த்ரீகளினுடைய
செவ்வாய், Sevvaai - சிவந்த வாயில் நின்று முண்டான
மொழி, Mozhi - சொற்களை
பயிலும், Payilum - ஆவ்ருத்திபண்ணாநின்ற
சிறுபுலியூர்,, Siru Puliyur - சலசயனத்து-;
ஐ வாய், Ai Vaai - ஐந்து வாயையுடைய
அரவு அணை மேல், Aravu Anai Mael - அதிசேஷனாகிற சயனத்தில் மீது
உறை, Urai - உறைகின்ற
அமலா, Amalaa - நின்மலனே!
மை ஆர், Mai Aar - அயணிந்ததாய்
வரி, Vari - ரேகைகளையுடைத்தாய்
நீலம் மலர், Neelam Malar - கரு நெய்தல் பூப்போன்றதான
கண்ணார், Kannaar - கண்ணையுடையரான மாதர்களிடத்திலே
மனம், Manam - மனத்தை
விட்டிட்டு, Vittittu - விட்டொழித்து
உய்வான், Uyvaan - உஜ்ஜீவிப்பதற்காக
உன கழலே, Un Kazhale - உனது திருவடிகளையே
தொழுது எழுவேன், Thozhudhu Ezhuvein - வணங்கியெழுகின்றேன்;
அருளாய், Arulai - (அடியேன் மீது) க்ருபை செய்தருள்.