திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1636 | பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிரதிசய போக்யனாய்க் கொண்டு ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடும் கூட சிறுபுலியூர்ச் சல சயனத்த்திலே சாய்ந்து அருளினவனே-ஸ்ரீ யபதியான உனது திருவடிகளை ஒழிய எனக்கு வேறு ஒரு புகல் இல்லை பிராப்யம் இல்லை) 9 | கருமா முகிலுருவா கனலுருவா புனலுருவா
பெருமால் வரை யுருவா பிறவுருவா நினதுருவா
திருமா மகள் மருவும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
அருமா கடலமுதே யுனதடியே சரணாமே –7-9-9 | பதவுரை Show / Hideகரு மா முகில் உருவா, Karuma Mukil Uruva - கறுத்துப் பெருத்த மேகம் போன்றவடிவையுடையவனே! (- (சிறுபுலியூர் சலசயனத்து-;)) கனல் உருவா, Kanal Uruva - (அன்பில்லாதார்க்கு அணுகவொண்ணாதபடி) நெருப்பைப்போலும் உருவமுடையவனே! புனல் உருவா, Punal Uruva - நீர்போலே குளிர்ந்த வடிவையுடையவனே! பெரு மால் வரை உருவா, Perumal Varai Uruva - மிகவும் பெரிய மலைபோன்ற உருவத்தையுடையவனே! பிற உருவா, Pira Uruva - மற்றுமுள்ள பொருள்களையும் வடிவாக வுடையவனே! நினது உருவா, Ninathu Uruva - உனக்கு அஸாதாரணமான திவ்யமங்களவிக்ரஹத்தை யுடையவனே! திரு மா மகள் மருவும், Thiru Ma Magal Maruvum - பெரிய பிராட்டியார் பொருந்தி வாழ்கிற அரு மா கடல் அமுதே, Aru Ma Kadal Amudhe - பெறுதற்கரிய சிறந்த கடலமுதம் போன்றவனே! உனது அடியே, Unathu Adiye - உனது திருவடிகளே சரண் ஆம், Saran Aam - (அடியேனுக்கு) புகலிடமாம். |