திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1638 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1638பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான் நித்ய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தேயும் இதுக்கு முன்பு அனுபவித்து அறியாதது ஒன்றில் போலே பிறக்கிற ஆசை யானவனை –அம்ருதத்தை நீராகப் பாய்ச்சி வளர்த்தால் போலே நிரதிசய போக்ய பூதமான கரும்பு போலே இனியனாய் இருக்கிறவனை – அப்போதே நுகரலாம்படி பக்வ பலமாய் இருக்கிறவனை –பசித்த இடத்தே ஸூக போஜனம் பண்ணப் பெறுவாரைப் போலே அபேஷை பிறந்த இடத்தே கண்டு அனுபவிக்கப் பெற்றேன்) 1
பெரும் புறக் கடலை யடல் ஏற்றினைப் பெண்ணை யானை எண்ணில் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக் கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-1
பதவுரை Show / Hide
பெரு புறம் கடலை, Peru Puram Kadalai - விசாலமான இடத்தை யுடைத்தான கடல் போலே அளவிட முடியாத ஸ்வரூப ஸ்வபாவங்களை யுடையவனும்
அடல் ஏற்றினை, Adal Aetrinai - செருக்குடைய ரிஷபம் போலே மேனாணிப் புள்ளவனும்
பெண்ணை, Pennai - ஸ்திரீகளைப்போல் பாரதந்திரியமே வடிவாயிருப்பவனும்
ஆணை, Aanai - ஸ்வதந்தரனாயிருப்பவனும்
எண் இல் முனிவர்க்கு, En Il Munivarkku - எண்ணிறந்தயோகிகளுக்கு
அருள் தரும் தவத்தை, Arul Tarum Thavathai - அருள் தந்திடும் தவப்பயனாயுள்ளவனும்
முத்தின் திரள் கோவையை, Muththin Thiral Kovaiyai - முத்துத்திரளினாலாகிய மாலை போன்றவனும்
பத்தர் ஆவியை, Pathar Aaviyai - பக்தர்களுக்கு உயிர் நிலையாயிருப்பவனும்
நித்திலம் தொத்தினை, Niththilam Thoththinai - முத்துக்குவியல் போன்றிருப்பவனும்
அரும்பினை, Arumbinai - அரும்புபோல குமாரத் தன்மையுள்ளவனும்
அலரை, Alarai - மலர்ந்த புஷ்பம்போலே யௌவன பருவ முள்ளவனும்
அடியேன் மனத்து ஆசையை, Adiyen Manaththu Aasaiyai - அடியேனுடைய மனத்திலே புதிது புதிதாகத் தோன்றுகிற ஆசைக்கு இலக்கானவனும்
அமுதம் பொதி இன் சுவை கரும்பினை, Amudham Pothi In Suvai Karumbinai - அமுதத்தை நீராகப் பாய்ச்சி அதனால் வளர்ந்த இனிய சுவையை யுடைய கரும்புபோல் மதுரமானவனும்
கனியை, Kaniyai - கனிபோல் அப்போதே அநுபவிக்கத்தக்க போக்யனுமான எம்பெருமானை
சென்று நாடி, Sendru Naadi - தேடித்திரிந்து
கண்ண மங்கையுள், Kanna Mangaiyul - திருக்கண்ண மங்கையிலே
கண்டு கொண்டேன், Kandu Konden - ஸேவிக்கப்பெற்றேன்.