திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1641 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1641பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இந்த ஸ்வ பாவத்தைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவனை –எனக்கு கைம்முதல் இல்லாத வன்று அழித்துக் கெடுத்து ஜிவிக்கலாம் படி யான நிதியானவனை –பொன் போலே ஸ்ப்ருஹநீயம் ஆனவனை – அப் பொன்னை அழித்தும் ஸ்வீகரிக்கக் கடவ ரத்னம் போலே ஸ்லாக்கியம் ஆனவனை – சென்று நாடி ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே) 4
பேய் முலைத்தள நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள் ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக் காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-4
பதவுரை Show / Hide
பேய் முலைத்தலை நஞ்சு உண்ட பிள்ளையாய், Pei Mulaitthalai Nanju Unda Pillaiyaai - பேய்ச்சியாகிய பூதனையுடைய முலையிடத்துண்டான விஷத்தை அமுது செய்த சிறுவனும், (- (சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன்-))
தெள்ளியார் வணங்கப்படும் தேவனை, Thelliyaar Vanangappadum Devanai - தெளிந்த ஞானிகளால் ஆச்ரயிக்கப்படுகின்ற தெய்வமாயிருப்பவனும்
மாயனை, Maayanai - ஆச்சரியனும்
மதிள் கோவல் இடைகழி மைந்தனை, Mathil Koval Idaikazhi Maindhanai - திருமதிளை யுடைய திருக்கோவலூரிலே இடைகழியிலுறைகின்ற யுவாவானவனும்
அன்றி, Andri - தவிரவும்
அந்தணர், Andhanar - அந்தணர்களினுடைய
சிந்தையுள், Sindhaiyul - மனத்திலேயிருந்து கொண்டு
ஈசனை, Eesanai - அவர்களை நியமிப்பவனும்
இலங்கும் சுடர் சோதியை, Ilankum Sudar Sothiyai - ஒளிபெற்று விளங்குகின்ற பெருஞ் சோதிமயமாயிருப்பவனும்.
எந்தையை, Endhaiyai - எனக்கு ஸ்வாமியம்
எனக்கு எய்ப்பினில் வைப்பினை, Enakku Eyppinil Vaippinai - எனக்குத் தளர்த்தி வருங்காலத்தில் (உதவக் கூடிய) நிதி போன்றவனும்
காசினை, Kaasinai - பொன் போன்றவனும்
மணியை, Maniyai - ரத்னம் போன்றவனுமான எம்பெருமானை