திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1642 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1642பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவ்வளவும் போகப் பற்றாதார்க்கு காட்சி கொடுக்கைக்காக ஸ்ரீ திரு நின்றவூரிலே நிற்கிற முத்துத் திரள் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனை – ஸ்வ ஸ்பர்சத்தால் வரும் ஸூகமாய் இருக்கிறவனை – தாரகம் ஆனவனை –-சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே) 5
ஏற்றினை இமயத்துள் எம் மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை ஆற்றலை யண்டத்தப் புறத்து உய்த்திடும் ஐயனைக் கையில் ஆழி ஓன்று ஏந்திய கூற்றினைக் குரு மா மணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினைக் காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-5
பதவுரை Show / Hide
ஏற்றினை, Aetrinai - காளைபோல் செருக்குடையவனும் (- (சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன்-.))
இமயத்துள் எம் ஈசனை, Imayathul Em Eesanai - இமயமலைத் திருப்பிரிதியிலெழுந்தருளியிருக்கின்ற ஸ்வாமியும்
இம்மையை, Immayai - இஹலோகத்ததுப் பலன்களை யளிப்பவனும்
மறுமைக்கு மருந்தினை, Marumaikku Marundhinai - பரலோகபுருஷார்த்தத்திற்கு ஸாதனமாயிருப்பவனும்
ஆற்றலை, Aatralai - பரிபூர்ணசக்தியே வடிவெடுத்தது போலிருப்பவனும்
அண்டத்து அப்புறத்து, Andaththu Appuraththu - அண்டங்களுக்கு அப்பாலுள்ள பரமபதத்தில்
உய்த்திடும், Uyththidum - (அன்பர்களைச்) செலுத்தவல்ல
ஐயனை, Aiyyanai - ஸ்வாமியும்
கையில், Kaiyil - திருக்கையில்
ஒன்று ஆழி, Onru Aazhi - ஒப்பற்ற திருவாழியை
ஏந்திய, Aendhiya - தரித்துக்கொண்டுள்ளவனும்
கூற்றினை, Koottinai - (எதிரிகட்கு) யமன் போன்றவனும்,
குரு மா மணி குன்றினை, Guru Maa Mani Kunrinai - சிறந்த நீலமணிமயமான மலைபோன்றவனும்
நின்றவூர் நின்ற நித்திலம் தொத்தினை, Ninravoor Nindra Niththilam Thoththinai - திருநின்றவூரி லெழுந்தருளி யிருக்கிற முத்துத்திரள் போன்றவனும்
காற்றினை, Kaatrinai - காற்றுப்போல் ஸுகமளிப்பவனும்
புனலை, Punalai - தண்ணீர்போல் உயிர்தரிக்கச் செய்பவனமான பெருமானை