திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1643 | பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வைஸ் ஸ்ப்ருஹநீயமானவனை-போக்ய-போகோ உபகரண போக ஸ்தானங்களாய் உள்ளவனை – காலமே சேஷித்த அன்று காலமாய் நின்றவனை – நித்தியமான திவ்ய ஆயுதங்களை ஏந்தும் திருக் கையை உடையவனை – நித்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனை -என்றபடி – பிராமணர் உடைய மரியாதை போலே இருக்கிற சங்கல்பத்தை உடையவனை – பிராமணராலே அத்யயனம் பண்ணப் படுகிறவனை-என்றுமாம் –ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே) 6 | துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச் சுடர் வான் கலன் பெய்ததோர்
செப்பினைத் திருமங்கை மணாளனைத் தேவனைத் திகழும் பவளத்தொளி
யொப்பனை யுலகேழினை யூழியை ஆழி ஏந்திய கையனை யந்தணர்
கற்பினைக் கழுநீர் மலரும் வயல் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-6 | பதவுரை Show / Hideதுப்பனை, Thuppanai - ஸத்யஸங்கல்பனும் (- (கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே-.)) துரங்கம், Thurangam - குதிரைவடிவாய் வந்த அஸுரன் பட, Pada - அழியும்படி சீறிய, Seeriyai - சீற்றங்கொண்ட தோன்றலை, Thonralai - பெருமையிற்சிறந்தவனும் சுடர் வான் கலன்பெய்தது, Sudar Vaan Kalanpeithathu - ஒளிபொருந்திய சிறந்த ஆபரணங்களை இட்டு வைப்பதற்குரிய ஓர் செப்பினை, Oru Seppinai - ஒரு கரண்டகம் போன்றவனும் திருமங்கை மணாளனை, Thirumangai Manalanai - திருமகள் கொழுநனும் தேவனை, Devanai - அத்திருமகளுடைய சேர்த்தியால் விளங்குபவனும் திகழும் பவளத்து ஒளி ஒப்பனை, Thigazhum Pavazhathu Olli Oppanai - விளங்குகின்ற பவழங்களின் ஒளியை ஒத்திருப்பவனும் உலகு ஏழினை, Ulaku Ezhinai - ஏழுலகங்கட்கும் நியாமகனும் ஊழியை, Oozhiyai - காலமாய் நிற்பவனும் ஆழி ஏந்திய கையனை, Aazhi Aendhiya Kaiyanai - சக்கரமேந்திய திருக்கையை யுடையவனும் அந்தணர் கற்பினை, Andhanar Karppinai - அந்தணர்களின் கல்விக்கு விஷயமாயிருப்பவனுமான எம்பிரானை கழுநீர் மலரும் வயல், Kazhunir Malarum Vayal - செங்கழுநீர்ப்பூக்கள் மலரப்பெற்ற வயல்களை யுடைத்தான |