திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1644 | பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விரோதிகளைப் போக்குமவன் –விரோதி நிரசனத்தை சீலமாக உடைய உபகாரகனை – படபாமுகாக்னி ஜலம் அடைய தகன் பக்கலிலே வந்து சுவரும்படி இருக்குமா போலே சர்வ பதார்த்தங்களும் தன பக்கலிலே வந்து லயிக்கும்படி இருக்கும் சக்தியை உடையவனை – களிவண்டு அறையும் பொழில் ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டேனே) 7 | திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத் தேவதேவனை மூவரில் முன்னிய
விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய
அருத்தனை யரியைப் பரி கீறிய அப்பனை யப்பிலார் அழலாய் நின்ற
கருத்தனைக் களிவண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே –7-10-7 | பதவுரை Show / Hideதிருத்தனை, Thiruthanai - எப்போதும் பூர்ணத்ருப்தி யுள்ளவனும் (- (கண்ணமங்கையுள், கண்டுகொண்டேன்-)) திசை நான்முகன் தந்தையை, Thisai Naanmugan Thandhaiyai - சதுர்முகப்ரஹ்மாவுக்கு ஜனகனும் தேவதேவனை, Devadevanai - தேவாதிதேவனும் மூவரில், Moovariyil - (‘அரி அயன் அரன்’ என்று சொல்லப்படுகிற மும்மூர்த்திகளுள் முன்னிய, Munniya - முற்பட்டிருக்கிற விருத்தனை, Viruthanai - தலைவனும் விளங்கும் சுடர் சோதியை, Vilangum Sudar Sothiyai - விளங்குகின்ற தேஜோராசிமயமான திவ்யமங்களவிக்ரஹத் தையுடையவனும் விண்ணை, Vinnai - மேலுலகங்கட்கு நியாமகனும் மண்ணினை, Manninai - மண்ணுலகுக்கு நியாமகனும் கண்ணுதல் கூடிய அருத்தனை, Kannuthal Koodiya Aruthanai - நெற்றிக்கண்ணனான சிவன் கூடப்பெற்ற (தனது திருமேனியிற்)பாதிபாகத்தையுடையவனும் அரியை, Ariyai - ஹரியென்னுந் திருநாமமுடையவனும் பரி கீறிய அப்பனை, Pari Keeriyah Appanai - குதிரையாய்வந்த அஸுரனைக் கிழித்த உபகாரனும் அப்பில் ஆர் அழல் ஆய் நின்ற கருத்தனை, Appil Aar Azhai Aay Nindra Karuthanai - நீரிலுள்ள பாடபாக்நியானது ஜலமெல்லாம் தன்னிடத்தே வந்து சுவறும்படியிருக்குமா போலே ஸகலபதார்த்தங்களும் தன்னிடத்தே வந்து லயிக்கும்படி யிருக்கிற முழுமுதற்கர்த்தாவுமான எம்பெருமானை களி வண்டு அறையும் பொழில், Kali Vandu Araiym Pozil - களித்த வண்டுகள் இசைபாடுஞ் சோலைகளையுடைய |