திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1652 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1652பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நம்முடைய உத்தேச்யமும் நிரதிசய போக்யமாய் இரா நின்றது – சேர்ப்பாரும் அருகே இருக்க -நான் எத்தைச் சொல்லி அகலுவது -என்னா நின்றாள் – எனக்கு பற்றாசானார் இருக்க நான் என்ன கண் அழிவு சொல்லிக் கடக்க போவது போக்யதை இல்லாமையோ –பிராப்தன் அல்லாமையோ –சேர்ப்பார் இல்லாமையோ –நான் எத்தைச் சொல்லி அகலுவது – நிரதிசய போக்யனான இவனை இவள் அனுபவித்து சொல்லுகிறாள் போலே இருந்தது) 5
அடித் தலமும் தாமரையே அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால் முடித் தலமும் பொற் பூணும் என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால் வடித் தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின்றாளால் கடிக்கமலம் கள்ளுகுக்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-5
பதவுரை Show / Hide
அடித்தலமும், Adiththalum - திருவடிகளும் (- (என்கின்றாள் ஆல்…,) (என்கின்றாள் ஆல்…. ;) (கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ…,))
தாமரையே, Thamaraiye - தாமரைப்பூவே;
அம் கைகளும், Am Kaigalum - அழகிய திருக்கைகளும்
பங்கயமே, Pangayame - தாமரைப்பூவே;
முடித்தலமும், Mudiththalum - கிரீடமும்
பொன் பூணும், Pon Poonum - (அதிலிழைத்த) திருவாபரணமும்
என் நெஞ்சத்துள் அகலாது, En Nenchatthul Akalathu - என் மனத்தைவிட்டுப் பிரியாது
வடி, Vadi - கூர்மை பொருந்திய
தட கண், Thada Kan - பெரிய கண்களையுடையளான
மலரவளோ, Malaravaloo - பங்கயச் செல்வியான பெரிய பிராட்டியாரோ வென்னில்
வரை ஆகத்துள் இருப்பாள் என்கின்றாள், Varai Agaththul Iruppaal Enkindraal - மலைபோன்ற திருமார்பிலிருக்கிறாளென்று சொல்லுகிறாள்;
கடி கமலம், Kadi Kamalam - பரிமளமுள்ள தாமரைப்பூக்கள்
கள் உகுக்கும், Kal Ukukkum - தேனைப் பொழியப் பெற்ற