திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1654 | பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் உடைய உடை வாய்ப்பிலே தோற்றமை தோற்ற வாய் விடா நின்றாள் – திருப் பீதாம்பரம் சாத்தினால்- கௌசேய புஷ்பித கடீ தடம் -என்கிறபடியே திருவரை பூத்தாப் போலே யாயிற்று இருப்பது) 7 | செவ்வரத்த உடை ஆடை யதன் மேலோர் சிவளிகைக் கச்சென்கின்றாளால்
அவ்வரத்த வடியிணையும் அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால்
கைவளர்க்கும் அழலாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-7 | பதவுரை Show / Hideசெம் வரத்த உடை ஆடை, Sem Varath Uday Aadai - (என்றும்) சிவந்ததாய்ச் சிறந்ததாக உடுக்கப்பட்ட பீதாம்பரம் (- (அன்றி,) (என்கின்றாள் ஆல் – ;) (கண்ணபுரத்து அம்மானை கண்டாள் கொலோ-)) அதன் மேல் ஓர் சிவளிகை கச்சு என்கின்றாள், Adhan Mel Oor Sivalikai Kachchu Enkindraal - அந்தப் பீதாம்பரத்தின் மேல் ஒப்பற்ற சிவளிகைகச்சு (சாத்தப்பட்டிருக்கிறது) என்றும் சொல்லுகிறாள்; அவ் வரத்த அடி இணையும், Av Varath Adi Inaiyum - அப்படிப்பட்ட சிறந்த உபயபாதங்களும் அம் கைகளும், Am Kaigalum - அழகிய திருக்கைகளும் பங்கயமே என்கின்றாள், Pangayame Enkindraal - தாமரைப்பூவே என்று சொல்லுகிறாள்; மை வளர்க்கும் மணி உருவம், Mai Valarkkum Mani Uruvam - நீலநிறத்தை மிகுதியாகத் தோற்றுவிக்கின்ற நீலமணி போன்ற திருமேனி மரதகமோ, Marathagamo - மரதகமணியோ, மழை முகிலோ, Mazhai Mukilo - காளமேகமோ கை வளர்க்கும் அழல் ஆளர், Kai Valarkkum Azhai Aalar - தமது கைகளால் ஓம்பப்படுகின்ற அக்நியையுடைய வரான அந்தணர் வாழ்கிற |