திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1656 | பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி சொன்ன இரண்டு அர்த்தத்தையும் அது காட்டுமோ – பயில்கின்றாளால் -என்றது கண்டாயே –எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ – இப்படியாக வேண்டாவோ -என்று ஸ்ரீ ஜீயர் – கண்டவர்கள் நெஞ்சை மேல் எழுத்துக் கொடா நிற்பர்கள் ஆயிற்று) 9 | வண்டமரும் வனமாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-9 | பதவுரை Show / Hideவண்டு அமரும், Vandu Amarum - வண்டுகள் படிந்த (- (கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ-)) வனமாலை, Vanamalai - திருத்துழாய் மாலை மணிமுடிமேல், Manimudimeel - ரத்ன கிரீடத்தின் மீது மணம் நாறும் என்கின்றாள், Manam Naarum Enkindraal - பரிமளம் கமழ நிற்கிறது என்கிறாள்; எனக்கு இவர் பால் அன்பு உண்டு என்று, Enakku Ivar Paal Anbu Undu Endru - ‘எனக்கு இவரிடத்திலே அன்பு உண்டு’ என்று சொல்லி ஒருகாலும் பிரிகிலேன் ஆல் என்கின்றாள், Orukaalum Pirikileen Aal Enkindraal - (அவ்வன்பரை) ஒரு நொடிப்பொழுதும் பிரிந்திருக்க முடியவில்லையே யென்கிறாள்; இவரை, Ivarai - ‘இப்பெரியவரை பண்டு, Pandhu - இதற்கு முன்னம் யாம் கண்டறிவது, Yaam Kandarivathu - நாம் பார்த்திருப்பது எவ் ஊரில், Ev Ooril - எந்த வூரிலே? என்றே பயில்கி்ன்றாள், Endrae Payilkinraaal - என்றே பலகாலும் உருப்போடுகின்றாள்; கண்டவர், Kandavar - ஸேவித்தவர்களெல்லோரும் தம் மனம், Tham Manam - தங்கள் மனத்தை வழங்கும், Vazhangu - அர்ப்பணம் செய்து விடும் படியான |