திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1668 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1668பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மிக்க பரிமளத்தை உடைத்தான திருத் துழாய் மாலையையும் உடைத்தாய் பெரிய மிடுக்கையும் உடைத்தாய் மலை போலே இருக்கிற திருத் தோள்கள் அசையும் படியாக மலையை எடுத்து பரிஹரித்த ஆபத் சகனான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு-என்னுடைய தர்ச நீயமான வளையை இழந்தேன்) 1
கரையெடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும் திரை எடுத்து வரு புனல் சூழ் திருக் கண்ண புரத்து உறையும் விரையெடுத்த துழாய் அலங்கல் விறல் வரைத் தோள் புடை பெயர வரையெடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே –8-3-1
பதவுரை Show / Hide
கரை எடுத்த, Karai Edutha - கோஷத்தையுடைத்தாய்
சுரி, Suri - வளைந்த
சங்கும், Sangum - சங்குகளையும்
கனம், Kanam - செறிந்திருக்கிற
பவளத்து, Pavalathu - பவழங்களினுடைய
எழு, Ezhu - வளர்த்தியையுடைய
கொடியும், Kodiyum - கொடிகளையும்
திரை, Thirai - அலைகளானவை
எடுத்து வரு, Eduthu Varu - அடித்துக்கொண்டு வரப்பெற்ற
புனல், Punal - ஜலத்தாலே
சூழ், Sool - சூழப்பட்ட
திருக்கண்ணபுரத்து, Thirukkannapurathu - திருக்கண்ணபுரத்திலே
உறையும், Urayum - நித்யவாஸம் செய்தருள்பவனும்
விரை எடுத்த, Virai Edutha - பரிமளம் மிகுந்த
துழாய் அலங்கல், Thuzhai Alangkal - திருத்துழாய் மாலையை யணிந்த தாய்
விறல், Viral - மிடுக்கையுடையதாய்
வரை, Varai - மலைபோன்றதான
தோள், Thol - திருத்தோள்
புடை பெயர, Pudai Peyar - அசையும்படியாக
வரை எடுத்த, Varai Edutha - கோவர்த்தனமலையை யெடுத்து (க்குடையாகப்) பிடித்தவனுமான
பெருமானுக்கு, Perumanukku - எம்பெருமானுக்கு
என் வரி வளை, En Vari Vilai - எனது அழகிய வளைகளை
இழந்தேன், Izhandhen - இழந்துவிட்டேன்.