திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1672 | பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஈடுபட்டு ஓடி அமுது செய்த-தயிரைக் காட்டி -நீ களவு கண்டாய் என்பார்கள் என்று பார்த்து அத்தை இல்லை செய்கைக்காக –முகம் எங்கும் தடவிக் கொள்ளுகிற இளிம்பனுக்கு நான் இளிம்பு பட்டேன்) 5 | வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர் தம் செய் தொழில்கள்
தீ எடுத்து மறை வளர்க்கும் திருக் கண்ண புரத் துறையும்
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடி தயிர் உண்ட
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே –8-3-5 | பதவுரை Show / Hideஅந்தணர், Andhanar - பிராமணர் (- (திருக்கண்ணபுரத்து, உறையும்-;) (என் வரி வளை இழந்தேன்-.)) வாய் எடுத்த மந்திரத்தால், Vaai Edutha Mandiraththaal - உரக்க உச்சரிக்கப்படுகிற மந்திரங்களைக் கொண்டு தம் செய் தொழில்கள், Tham Sei Thozhilgal - தாங்கள் செய்யும் அநுஷ்டாக மாகிய தீ எடுத்து, Thee Eduthu - அக்நி காரியங்களைக் குறையறச் செய்து மறை வளர்க்கும், Marai Valarkkum - வேதமரியாதையை ஓங்கச் செய்யுமிடமான தாய் எடுத்த, Thaai Edutha - தாயான யசோதைப்பிராட்டி கையிலெடுத்த சிறு கோலுக்கு, Siru Kolukku - சிறிய தடிக்கு உளைந்த ஓடி, Ulainda Odi - அஞ்சி ஓடிச் சென்று தயிர் உண்ட வாய் துடைத்த, Thayir Unda Vaai Thudaitha - தயிரை அமுதுசெய்த வாயைத் துடைத்த மைந்தனுக்கு, Maindhanukku - ஸ்வாமிக்கு |