திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1674 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1674பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரளய காலத்தில் எடுத்து வைத்து பின்னே வெளி நாடு காண உமிழ்ந்த ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அவனுடைய ஆபத் சகச்வத்தை விஸ்வசித்து கிடாய் நான் கெட்டேன் -என்கிறார்) 7
வண்டமரும் மலர்ப்புன்னை வரி நீழல் அணி முத்தம் தெண்திரைகள் வரத் திரட்டும் திருக் கண்ண புரத் துறையும் எண் திசையும் எழு சுடரும் இரு நிலனும் பெரு விசும்பும் உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே –8-3-7
பதவுரை Show / Hide
வண்டு அமரும், Vandu Amarum - வண்டுகள் படிந்திருக்கிற (- (திருக்கண்ணபுரத்து, உறையும் -;) (என் ஒளி வளை இழந்தேன்-.))
மலர், Malar - புஷ்பங்களையுடைத்தான
புன்னை, Punnai - புன்னைமரத்தினுடைய
வரி நீழல், Vari Neezhal - அகன்ற நிழலிலே
தெண் திரைகள், Then Thiraigal - தெளிந்த அலைகளானவை
அணி முத்தம், Ani Muththam - அழகிய முத்துக்களை
வர திரட்டும், Vara Thirattum - கொண்டுவந்து திரட்டப்பெற்ற
எண் திசையும், En Thisaiyum - எட்டுத் திசைகளையும்
எழு கடலும், Ezu Kadalum - ஏழு கடல்களையும்
இரு நிலனும், Iru Nilanum - விசாலமான பூமியையும்
பெரு விசும்பும், Peru Visumbum - பெரிதான ஆகாசத்தையும்
உண்டு, Undu - (பிரளயத்தில்) அமுது செய்து
உமிழ்ந்த, Umizhndha - (பிறகு) வெளிப்படுத்தின
பெருமானுக்கு, Perumanukku - ஸ்வாமிக்கு