திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1675 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1675பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தர்ச நீயமான வடிவை உடையனான ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற – சிவந்த கமலத்தை உடைத்தான திரு நாபியை உடையவனுக்கு -உத்பாதகனை விஸ்வசித்து முடிந்தேன் -என்கிறாள்) 8
கொங்கு மலி கருங்குவளை கண்ணாகத் தெண் கயங்கள் செங்கமல முகமலர்த்தும் திருக் கண்ண புரத் துறையும் வங்கமலி தடங்கடலுள் வரி அரவின் அணைத் துயின்ற செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே –8-3-8
பதவுரை Show / Hide
தெண் கயங்கள், Then Kayangal - தெளிந்த தடாகங்களானவை (- (திருக்கண்ணபுரத்து, உறையும்-;) (என் செறி வளை இழந்தேன்-.))
கொங்கு மலி, Kongu Mali - பரிமளம் மிக்க
கரு குவளை, Karhu Kuvalai - கரு நெய்தற்பூக்களை
கண் ஆக, Kan Aaga - கண்களாகவும்
செம் கமலம், Sem Kamalam - செந்தாமரைப் பூக்களை
முகம், Mukam - முகங்களாகவும்
மலர்த்தும், Malarthum - விகஸிப்பிக்கப்பெற்ற
வங்கம் மலி தட கடலுள், Vangam Mali Thada Kadalul - அலைகள் நிரம்பிய பெரிய திருப்பாற்கடலிலே
வரி, Vari - கோடுகளையுடைய
அரவு, Aravu - திருவனந்தாழ்வானாகிற
இன், In - இனிமையான
அணை, Anai - திருப்பள்ளி மெத்தையிலே
துயின்ற, Thuyinra - சயனித்தருளாநின்ற
செம் கமலம் நாபனுக்கு, Sem Kamalam Nabanukku - செந்தாமரைப்பூவைத் திருநாபியிலே உடையனான பெருமானுக்கு