திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1676 | பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னை ஒழியச் செல்லாமை உடையாருக்கு தன்னை கொடுக்குமவன் அன்றோ – நம் செல்லாமை பரிஹரியானோ விஸ்வசித்து வளை இழந்தேன் -என்கிறாள்) 9 | வாராளும் இளங் கொங்கை நெடும் பணைத் தோள் மடப்பாவை
சீராளும் வரை மார்பன் திருக் கண்ண புரத் துறையும்
பேராளன் ஆயிரம் பேர் ஆயிரம் வாய் அரவணை மேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே –8-3-9 | பதவுரை Show / Hideவார் ஆளும் இளகொங்கை, Vaar Aalum Ilakongai - கச்சினால் தாங்கப்படுகின்ற இள முலைகளையுடையளாய் (- (திருக்கண்ணபுரத்து, உறையும்-;) (என் பெய் வளை இழந்தேன்-.) (பேராளர் பெருமான் பேராளரென்று மஹான்களுக்குப் பெயர்; அவர்கட்கும் மஹான் என்றபடி.)) நெடு பணை தோள், Nedu Panai Thol - நீண்ட மூங்கில் போன்ற தோள் களையுடையளாய் மடம், Madam - ஆத்மகுணங்களால் நிறைந்தவளாய் பாவை, Pavai - பதுமை போன்றவளான பெரிய பிராட்டியார் (நித்யவாஸம் பண்ணப் பெறுகையினாலே) சீர் ஆளும், Seer Aalum - சீர்மையை யுடைத்தான வரை, Varai - மலைபோன்ற மார்பன், Marban - திருமார்பையுடையவனும் பேர் ஆளன், Per Aalan - பெருமை பொருந்தியவனும் ஆயிரம் பேர், Aayiram Per - ஆயிரந்திருநாமங்களை யுடையவனும் ஆயிரம் வாய், Aayiram Vaai - ஆயிரம் முகங்களையுடைய அரவு, Aravu - ஆதிசேஷனாகிற அணை மேல், Anai Mel - படுக்கையின் மீது பள்ளி கொண்டிருப்பவனுமான பேராளர் பெருமானுக்கு, Peralar Perumanukku - தேவாதி தேவனுக்கு பெய்வளை, Peivazhai - அணிந்துக்கொண்டிருந்தவளை. |