திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1677 | பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாவிலே பொருந்தும் படி பாட சஹ்ருதயமாக பண்ணின பாபங்களும் விட்டுப் போம் – உக்தி மாத்ரத்தைச் சொல்ல புத்தி பூர்வகமாக பண்ணின பாபங்கள் கிட்டா -என்கிறார்) 10 | தேமருவு பொழில் புடை சூழ் திருக் கண்ண புரத் துறையும்
வாமனனை மறி கடல் சூழ் வயலாலி வள நாடன்
காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை
நா மருவி யிவை பாட வினையாய நண்ணாவே –8-3-10 | பதவுரை Show / Hideதே மருவு, The Maruvu - தேன் பொருந்திய பொழில், Pozhil - சோலைகளினால் புடை சூழ், Pudai Soozh - நாற்புறமுஞ் சூழப்பட்ட திருக்கண்ணபுரத்து, Thirukkannapurathu - திருக்கண்ணபுரத்தில் உறையும், Urayum - நித்யவாஸம் பண்ணுகிற வாமனனை, Vamananai - வாமநாவதாரம் செய்தருளின பெருமானைக் குறித்து, மறி கடல் சூழ், Mari Kadal Soozh - அலை மடிகின்ற கடலாலே சூழப்பட்டு வயல் வளம், Vayal Valam - வயல் வளங்களையு முடைத்தான ஆலி நாடன், Aali Naadan - திருவாலிநாட்டுக்குத் தலைவரும் காமரு சீர், Kamaru Seer - விரும்பத்தக்க குணங்களையுடையவருமான கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார் கண்டு உரைத்த, Kandu Uraitha - ஆராய்ந்து அருளிச்செய்த தமிழ் மாலை இவை, Tamizh Maalai Ivai - இத்தமிழ்ப் பாசுரங்களை நாமருவி, Naamaaruvi - நாவிலே பொருந்தவைத்து பாட, Paada - பாடுமளவிலே வினை ஆய, Vinai Aaya - பாபமென்று உள்ளவை யெல்லாம் நண்ணா, Nannaa - கிட்டாதே ஒழிந்துபோம் |